திருவள்ளூர், ஏப் 4- மெய்யூர் கிராமத்தில் குடிநீர் மேல்தேக்க தொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தொடர் போராட்டத்தால் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது. ஊத்துக்கோட்டை வட்டம், பூண்டி அருகில் உள்ள மெய்யூர் ஊராட்சி யில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக் கின்றனர். இந்த ஊராட்சி யில் 11 குடிநீர் தொட்டி கள் உள்ளன. இந்த தொட்டி களின் மூலம் ஊராட்சி நிர்வாகம் குடிநீரை ஏற்றி அப்பகுதி மக்களுக்கும் குடி நீரை வழங்கி வருகிறது. இதில் மேட்டுத்தெரு, முஸ்லிம் தெரு, வேட்டைக் காரன் தெரு மக்களுக்கு குடிநீர் வழங்க திரவு பதியம்மன் கோயில் அரு கில் உள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு நீர் தேக்க தொட்டிகள் உள்ளன. இவற் றிலிருந்து தான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திரவுபதி யம்மன் கோயில் அருகில் உள்ள குடிநீர் தொட்டியை கடந்த இரண்டரை ஆண்டு களாக சுத்தம் செய்யப்பட வில்லை என கூறப்படுகி றது. இதனால் குடிநீர் கலங்கிய நிலையில் சேரும், சகதியுமாக வந்துள்ளது. இந்த தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் சார்பில் பலமுறை மனுக்கள் கொடுத் தும் ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்த சூழலில் உலக தண்ணீர் தினத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பூண்டி ஒன்றிய செயலாளர் கே.விஜயகாந்த் குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் குடிநீரில் புழு, பூச்சிகள் கலந்து வருகிறது. இதனை பருக முடிய வில்லை. இதனால் பல நோய்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஊராட்சி நிர்வாகம் உடனடி யாக சுத்தம் செய்யவில்லை என்றால் வாலிபர் சங்கத்தின் சார்பில் சுத்தம் செய்யும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஏப்ரல் 1 அன்று ஊராட்சி நிர்வாகம் திரவுபதியம்மன் கோவில் அருகில் உள்ள தொட்டிகளை சுத்தம் செய்து மருந்துகளை தெளித்துள்ளனர். மாதம் இரண்டு முறை தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என்ற விதிமுறை இருந்தும், அதை பல ஊராட்சிகள் அமலாக்காத போக்கு உள்ளது. பல ஊராட்சிகள் குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யாத நிலையுள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நடப்பதற்கு முன்பு, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள குடிநீர் மேல்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் வலியுறுத்தியுள்ளனர்.