சிவகங்கை, பிப்.25- பிரதமர் மோடியை விமர்சித்த முதிய ரயில் பயணிக்கு மிரட்டல் விடுத்த பாஜக ஊடகத்தொடர்பாளர் நாராய ணன் திருப்பதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிவகங்கை யில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மிரட்டல் விடுத்ததை தட்டிக்கேட்ட தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலா ளர் கே. சாமுவேல்ராஜூவையும் பாஜக நாராயணன் திருப்பதி மிரட்டியுள்ளார். இதனைக் கண்டித்தும் பாஜக நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில சிவகங்கையில் பிப்ரவரி 25 சனிக்கிழமையன்று நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்டத் தலைவர் முத்துராமலிங்க பூபதி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தண்டியப்பன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வீரையா, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மோகன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சாந்தி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி , வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ்,மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் இன்னாசிராஜா ஆகியோர் பேசினர்.