சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமா லத்தீப்பின் தந்தை அப்துல் லத்தீப் சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை சந்தித்து மாணவி பாத்திமா லத்தீப் மரணத்திற்கு நீதி கிடைக்கவும், தாமதமின்றி குற்றவாளிகள் தண்டிக்கப்பட விசாரணை முறையாக நடைபெற தலையிடவும் கோரினார். இச்சந்திப்பின் போது கொல்லம் மாநகர முன்னாள் மேயர் ராஜேந்திரபாபு, வாலிபர் சங்க வடசென்னை மாவட்டச் செயலாளர் சரவண தமிழன் ஆகியோர் உடன் இருந்தனர்.