சிதம்பரம், மார்ச் 31 - தமிழ்நாட்டில் அதிமுக- பாஜக தலைமையிலான கூட்டணி ‘கொள் ளைக் கூட்டணி’ என்று உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்.
தமிழகத்தில், திமுக தலைமை யிலான ‘இந்தியா’ கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும், தமி ழக இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், தனது 8-ஆவது நாள் பிரச்சாரத்தில் 15-ஆவது தொகுதியாக சிதம்பரம் (தனி) தொகுதிக்கு உட்பட்ட சிதம்பரம் தெற்கு வீதியில், விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் பானைச் சின் னத்திற்கு வாக்குகள் கேட்டு உதய நிதி ஸ்டாலின் பரப்புரை மேற் கொண் டார்.
பாசிச பாஜகவை வீழ்த்துவோம்
அப்போது, “பாசிச பாஜகவை வீழ்த்தி மனிதநேயம், மதச்சார் பின்மை, அரசியலமைப்புச் சட் டத்தை பாதுகாக்க வேண்டும், மாநில உரிமைகள், சுயாட்சியை நிலை நிறுத்த வேண்டும் என்ற கொள்கை அடிப்படையில் உரு வானதுதான் திமுக தலைமையி லான இந்தியா கூட்டணி. இதில் உள்ள கட்சிகள் அனைத்தும் கொள்கை கூட்டணி. எதிர் முகா மில் இருக்கும் பாஜக மற்றும் அதி முகவும் அமைத்திருப்பது கொள் ளைக் கூட்டணி என்று கடுமையாக விமர்சித்தார்.
தகுதியான அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்
தொடர்ந்து பேசிய அவர், “என் னுடைய பிரச்சாரம் ஒரு ட்ரெய்லர் தான். வரும் 6-ஆம் தேதி முதல மைச்சர் இதே தொகுதியில் பிரச்சா ரம் மேற்கொள்கிறார். அப்போது, பாஜக அரசின் பாசிச நடவடிக்கை கள் என்னென்ன? தமிழ்நாடு அரசு இதுவரைக்கும் செய்துள்ள திட்டங் கள் என்ன? என்ன? என்பதை விரி வாகவும் விளக்கமாகவும் பேசு வார்” என்றார்.
“கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் 1 கோடியே 16 லட்சம் மகளிர் உரிமைத் தொகை பெறு கிறார்கள். மேலும் விண்ணப்பித்து காத்திருக்கும் மகளிருக்கும் அந்த தொகை வழங்கப்படும்” என்று உறுதியளித்தார்.
எதிர்க்கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் பெறக் கூடாது
“கடந்த முறை இதே தொகுதி யில் போட்டியிட்ட திருமாவளவன் மிகக் குறைந்த வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், இந்த முறை அவரைக் குறைந்தபட்சம் 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றிபெற செய்ய வேண் டும். எதிர் தரப்பு வேட்பாளர் கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக டெபாசிட் இழக்கச் செய்ய வேண் டும்” என்றும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.