districts

img

ரூ.6.21 கோடி மதிப்பிலான கல்விக்கடன் வழங்கல்

சேலம், அக்.17- சேலம் ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 102 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6.21 கோடி மதிப்பிலான கல்விக்கடன் உதவிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு,  அர.சக்கரபாணி ஆகியோர் வழங்கினர். கல்வி கற்க பொருளா தாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற  நோக்கில், சேலம் மாவட்ட நிர்வாகத்தால் ஞாயிறன்று சேலம் சோனா கல்லூரியில் மாபெரும் கல்விக்கடன் மேளா நடை பெற்றது. இக்கல்விக்கடன் மேளாவில் சேலம் மாவட்டத்தில் உள்ள 47 வங்கிகள் மற்றும் இதன் 503 வங்கி கிளைகள் கலந்து  கொண்டு மாணவ, மாணவிகளின் கல்விக் கடன் விண்ணப்பத்தினை பெற்றுக் கொண் டன. அவ்வாறு பெற்றுக்கொண்ட விண்ணப் பத்தினை பரிசீலனை செய்து கடன் வழங்கிட  உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. அந்தவகையில், திங்களன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற விழா வில், வங்கிக்கடன் மேளாவில் மாணவ,  மாணவிகள் அளித்த விண்ணப்பங்களை பரி சீலித்து, தகுதியான மாணவ, மாணவி களுக்கு கல்விக் கடன் வழங்கிட உடனடி யாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் உயர் கல்வி பயிலும் 102 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6.21 கோடி மதிப்பிலான கல்விக்கடன் உதவிகளை நகராட்சி நிர்வா கத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வின்போது, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் ஹர் சகாய் மீனா, மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், சேலம் நாடாளு மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ரா. ராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப் பினர் ரா.அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப் பினர் எஸ்.சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.