நாமக்கல், செப்.20- நாமக்கல்லில் தனியார் உணவ கத்தில் பர்கர் சப்பிட்ட சிறுவன் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அரசு மருத் துவமனையில் தீவிர சிகிக்சை பெற்று வருகிறார். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில், கடந்த செப்.16 ஆம் தேதியன்று ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி கலையரசி உயிழந்த தோடு, இந்த உணவகத்தில் சாப்பிட்ட சுமார் 43 பேர் நாமக்கல் அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனை மற் றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை யடுத்து கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்த தனியார் உணவக உரிமையாளர் நவீன்குமார் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து, நாமக்கல் கிளைச்சிறையில் அடைத் தனர். மேலும், மாவட்ட முழுவதும் ஷவர்மா விற்பனைக்கு ஆட்சியர் தடை விதித்துள்ளார். இதனிடையே அந்த தனியார் உணவகத்திற்கு இறைச்சிகளை விநியோகித்து வந்த நாமக்கல் மாவட்டம், ராமாவரம் புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் கோனார் கறிக்கோழி கடை உரிமை யாளர் சீனிவாசன் என்பரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியது. இந்நிலையில், நாமக்கல் - சேலம் சாலையில் இயங்கி வரும் ‘மிஸ்டர் பர்கர்’ என்ற தனியார் உணவகத்தில் செவ்வாயன்று இரவு பர்கர் சாப்பிட்ட நாமக்கல், பூங்கா நகரைச் சேர்ந்த 18 வயது சிறுவன் சஞ்சய் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதைய டுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். மேலும், இதே உணவகத்தில் சாப்பிட்டு வாந்தி, மயக்கமடைந்த 7 பேர் முத லுதவி சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பினர். சஞ்சய் மட்டும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகி றார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவரது பெற்றோர் கதறிய படி உள்ளனர். இதையடுத்து உணவு பாதுகாப் புத்துறை அதிகாரிகள், அக்கடையில் புதனன்று காலை ஆய்வு மேற் கொண்டு, தரமற்ற உணவுப்பொருட் களை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். விசாரணை முடிவில் கடை உரி மையாளர் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என அதிகாரிகள் தெரிவித்த னர்.