districts

img

சிபிஎம் ஓமலுர் தாலுகாச் செயலாளராக கே.சேகர் தேர்வு

சேலம், நவ.5- மார்க்சிஸ்ட் கட்சியின் ஓமலூர் தாலுகாச் செயலாள ராக கே.சேகர் தேர்வு செய்யப் பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா 24 ஆவது  மாநாடு, தோழர்கள் என்.சங்க ரய்யா, சீத்தாராம் யெச்சூரி ஆகி யோரது நினைவரங்கத்திலும், தோழர் கே.ஆர்.கண்ணன் நுழைவுவாயிலிலும் திங் களன்று நடைபெற்றது. பி.அரியாகவுண்டர் செங்கொடியை ஏற்றி வைத்தார். எம்.சின்ராஜ்  வரவேற்றார். கே.சேகர் அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார். மாநில செயற்குழு உறுப் பினர் பி.செல்வசிங் மாநாட்டை துவக்கி  வைத்துப் பேசினார். தாலுகாச் செயலாளர்  என்.ஈஸ்வரன் அறிக்கையை முன்வைத்தார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.உதய குமார், எஸ்.கே.சேகர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், ஓமலூரில் அரசு  கலைக்கல்லூரி மற்றும் அரசு தொழிற் பயிற்சி நிலையம் அமைக்க  வேண்டும். பேரூராட்சி பகுதிக ளிலும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை விரிவுப்படுத்தி, அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். ஓமலூர், காடையாம்பட்டி ஆகிய பகுதிக ளில் அதிகமாக கரும்பு விவசா யம் நடைபெறுகிறது. இப்பகுதி யில் தொழில் மேம்பாடு அடைய சர்க்கரை ஆலை அமைக்க வேண் டும். விசைத்தறியில் கைத்தறி ரகத்தை ஓட்டக் கூடாது. காடையாம்பட்டி, பெத்தேல் காலனி யில் வசிக்கும் பொதுமக்களுக்கு சாலை மற் றும் மயான வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து, கட்சியின் ஓமலூர் தாலுகாச் செயலாளராக கே.சேகர் மற்றும்  13 தாலுகாக்குழு உறுப்பினர்கள் தேர்வு  செய்யப்பட்டனர். மாவட்டச் செயலாளர்  மேவை.சண்முகராஜா நிறைவுரையாற்றி னார்.