districts

img

பூஜ்ய உமிழ்வு விழிப்புணர்வு பேரணி

கோவை, செப்.21- பூஜ்ஜிய உமிழ்வு நாளை முன்னிட்டு, வியாழனன்று கோவையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  புதைபடிவ எரி பொருள்களில் இருந்து உலகிற்கு ஓய்வு அளிக்கும் வகையிலும் கார்பன் வெளியேற்றத்தால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வருடந்தோறும் செப்.21 ஆம் தேதியன்று சர்வதேச பூஜ்ஜிய உமிழ்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையடுத்து கார்பன் உள்ளிட்ட புதைப்படிவ எரிபொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.  இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கார்பன் உமிழ்வை குறைப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  இப்பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில், ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். ஆட்சியர் அலுவலகத்திலிருந்து துவங்கிய இந்த பேரணி தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.