districts

img

வங்கியில் கணக்கு இருந்தால், காப்பீடும் உள்ளது

கோவை, நவ.16- வங்கியில் கணக்கு வைத்து ஏடிஎம் கார்டு  வைத்திருக்கும் அனைவருக்கும் வங்கி  சார்பாக விபத்து, மற்றும் உயிரிழப்பு காப்பீடு  உள்ளதாக, விபத்தில் பாதிக்கப்பட்டு இழப் பீட்டிற்கு விண்ணப்பித்துள்ள  இளைஞர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் தமிழ் கிருஷ்ணசாமி. இவர், கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன் றத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறுகை யில், இன்றைய தினம் அனைத்தும் டிஜிட்டல்  மயமாகி விட்டது. போன் பே, ஜிபே, உள்ளிட்ட  செயலிகளை தினமும் பயன்படுத்தி வருக்கி றோம். இவ்வாறான செயலிகளை பயன்ப டுத்த முக்கிய காரணியாக வங்கி உள்ளது. எனவே, பெரும்பானோர் அனைவரும் வங்கி  கணக்கு வைத்திருக்கிறார்கள்.  அதேநேரத்தில், வங்கி கணக்கு வைத்தி ருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக் கும் வங்கி சார்பாக வாகன விபத்து காப்பீடு  மற்றும் உயிரிழப்பு காப்பீடு திட்டம் உள்ளது. இதனை பற்றி யாருக்கும் பெரிய அள வில் விழிப்புணர்வு இல்லை. வங்கி மேலா ளர்களுக்கே இது குறித்த புரிதல் இல்லை.  தனக்கு விபத்து ஏற்பட்டு, பல லட்சம் செலவு  செய்தேன். பின்னர், வங்கியில் இதுதொடர் பாக விண்ணப்பித்தேன். ஆனால், என்னு டைய மனுவை சரியாக புரிந்து கொள்ளா மல் வங்கி நிர்வாகம் அலைக்கழித்தது. இதைத்தொடர்ந்து, ஆர்பிஐ அதிகாரிக ளுக்கு மனு அனுப்பினேன். தற்போது வங்கி  நிர்வாகம் தங்களது தவறை புரிந்து கொண்டு,  தனக்கு இழப்பீடு தொகை வழங்குவ தாகவும், முறையாக நீதிமன்றம் மூலமாக  அனுகி அதை பெற்று கொள்ளலாம் என தெரி வித்துள்ளனர்.  இதுபோன்ற உரிமைகளை மக்கள்  தெரிந்து கொள்ள வேண்டும். விழிப்பு ணர்வுடன் மக்கள் இருக்க வேண்டும் என்கிற  நோக்கத்திற்காகவே இந்த செய்தியாளர் சந் திப்பில் பங்கேற்றதாக தெரிவித்தார்.