districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மின்வேலியில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

தருமபுரி, செப்.3- மகேந்திரமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி வாலி பர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அருகே உள்ள வீரன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த முனிராஜ் என்பவரின் மகன் பிரபு (25). இவர் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு, ஓசூ ரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், சனியன்று விடுமுறை என்பதால் ஊருக்கு வந்தவர், திங்களன்று விடியற்காலை அதேப்பகுதியில் உள்ள கண்ணப்பன் என்பவரின் கரும்பு தோட்டத்திற்கு காலை  கடன் கழிக்க சென்றார். அப்போது, அங்கு காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி பிரபு சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இதனிடையே, நீண்ட நேரமாகியும் வீட் டிற்கு வராததால், குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்க ளில் தேடி வந்த நிலையில், அவ்வழியாக சென்றவர்கள் பிரபு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, மகேந்திர மங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்  துறையினர் பிரபுவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக் காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பிச்சென்ற கண்ணப்பனை தேடி வருகின்றனர்.

கொல்லிமலை அருவிகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

நாமக்கல், செப்.3- கொல்லிமலையில் பெய்த தொடர் மழை காரணமாக, அங் குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற் றுலாப் பயணிகள் இரவு நேர பயணத்தை தவிர்க்குமாறு நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில், சிறந்த சுற்றுலாத் தலமாக கொல்லிமலை திகழ்ந்து வருகிறது. இயற்கை எழில் கொஞ் சும் கொல்லிமலைக்கு தமிழகம் மட்டுமன்றி, அண்டை  மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த ஒரு வாரமாக கொல்லிமலை யில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இத னால் அங்குள்ள காட்டாறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் நீர்வழிப்பாதைகள், ஓடைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அங்குள்ள ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்அருவி, சந்தனப்பாறை அருவி, சினிபால்ஸ் ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டு கிறது. தொடர் மழையின் காரணமாக, கொல்லிமலையில் ஜில் லென்று குளிர் காற்று வீசுகிறது. இதமான காலநிலை நிலவி வருவதால், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்று லாப் பயணிகள் வருகின்றனர். அங்குள்ள அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர். அருவிகளில் தண்ணீர் ஆர்ப் பரித்து கொட்டுவதால், குளிக்க செல்லும் சுற்றுலாப் பயணி கள் எச்சரிக்கையாக குளிக்க வேண்டும் என வனத்துறை யினர் வலியுறுத்தி வருகின்றனர். அருவியில் வரும் மழை  நீரில் மரக்கிளைகள், சிறிய கற்கள் அடித்து வரப்படுவதால் பாதுகாப்பாக அருவியின் நடுப்பகுதியில் சென்று குளிக்கா மல், ஓரமாக நின்று குளித்து விட்டு வருமாறு கேட்டுக் கொள் ளப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் மழை பெய்து  வருவதால், வெளியூரில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வீட்டு வசதி வாரியப் பொறியாளர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய முயற்சி

சேலம், செப்.3- சேலத்திலுள்ள வீட்டு வசதி வாரிய மேற்பார்வை பொறி யாளர் அலுவலகத்திலுள்ள பொருட்களை நீதிமன்ற ஊழி யர்கள் ஜப்தி செய்ய முயன்றதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 1977 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு வட்டத்திற்குட்பட்ட கூட்டப்பள்ளி காலனி, கொல் லப்பட்டி காலனி, தாஜ் நகர், எஸ்பிபி காலனியில் வீட்டு  வசதித்துறை மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டு, வீடுகள்  கட்டப்பட்டது. ஆனால், தற்போது வரை உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. இதுதொடர்பாக சேலம் முதலா வது கூடுதல் நீதிமன்றம் அளித்த உத்தரவின்பேரில், இழப்பீட் டுத் தொகையை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கோரி பாதிக்கப்பட்டோர் மீண்டும் நீதி மன்றத்தை நாடினர். உடனடியாக இழப்பீட்டு தொகையை வழங்கவில்லையெனில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவலகத்தில் உள்ள கணினிகள், மேஜை, நாற்காலி, மின்விசிறி உள்ளிட்ட தளவாடப் பொருட்களை ஜப்தி செய்யுமாறு நீதிபதி கவிதா உத்தர விட்டார். அதன்பேரில், நீதிமன்ற அமீனாக்கள் பாதிக்கப்பட்ட வர்களுடன், சேலத்திலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக் கையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டு வசதி வாரிய உதவி  செயற்பொறியாளர் அற்புதம், அமீனாக்கள் மற்றும் வழக் கறிஞர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில்  இழப்பீட்டுத் தொகை வழங்க மூன்று மாதம் கால அவகா சம் கேட்டதையடுத்து அனைவரும் திரும்பி சென்றனர். இந்த  வழக்கு தொடர்பாக திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் தளவாடப் பொருட்களை நீதிமன்ற ஊழியர்கள ஜப்தி  செய்ய முயன்றது குறிப்பிடத்தக்கது.

ரூ.1.85 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, செப்.3- அவிநாசி, செப்.3 சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத் தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ.1 லட்சத்து 85  ஆயிரத்துக்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 2,000 கிலோ நிலக்க டலையை விவசாயிகள் கொண்டு வந்து இருந்தனர். இதில்  நிலக்கடலை கிலோ ஒன்றுக்கு முதல் ரகம் ரூ.63 முதல் ரூ.66  வரையிலும், இரண்டாம் ரகம் ரூ.59.50 முதல் ரூ.62.50 வரையி லும், மூன்றாம் ரகம் ரூ.55.50முதல் ரூ.59.50 வரையிலும் ஏலம்  போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்துக்கு ஏலம்  நடைபெற்றது.

மாட்டுத் தீவனத்தின் தரத்தை ஆய்வு செய்திடுக

உடுமலை, செப்.3 - உடுமலை பகுதியில் தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் தீவனங்களை கால்நடைகளுக்கு கொடுத்தால், மாடுகளுக்கு நோய் கள் வருவதாகவும், மாட்டுத் தீவனத் தின் தரத்தை ஆய்வு செய்ய வேண் டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகா பகுதிகளில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் முக்கிய தொழிலாக கால்நடை வளர்ப்பு உள்ளது. முன்பு எல்லாம் கால்நடை வளர்ப்போர், தமிழக அரசின் கூட்டு றவு சங்க பால் நிறுவனமான ஆவின்  மூலம் பால் விற்பனை செய்து வந்தார் கள். பின் நாட்களில் பல தனியார்  பால் கொள்முதல் நிறுவனங்கள் பொது மக்களுக்கு வங்கி கடன், மாட் டுத்தீவனம் உட்பட பல்வேறு கவர்ச்சி யான சலுகைகள் தருவதால், அரசின்  ஆவின் பால் கொள்முதல் நிலையங் கள் பெயர் அளவிற்கு மட்டுமே  செயல்படுகிறது. இந்நிலையில், தற்போது தனியார் மாட்டுத்தீவனங் களை தொடர்ந்து கால்நடைகளுக்கு  தருவதால் பல மாடுகள் நோய்  தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக  விவசாயிகள் புகார் தெரிவித்துள்ள னர். கால்நடை துறை அதிகாரிகள் கால்நடைகளுக்கு தரப்படும் தீவ னங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயிகள் மற் றும் ஏழை மக்களின் முக்கிய வாழ்வா தாரமாக கால்நடை வளர்ப்பின் மூலம்  பால் உற்பத்தி செய்து வருகிறார்கள்.  இவர்களின் நலன் மற்றும் கால்நடை களின் நலனை கருத்தில் கொண்டு தீவனங்களை ஆய்வு செய்ய வேண் டும் என்கிற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

மாணவிகள் சமூக அக்கறையுள்ள  தொழில் முனைவோராக மாற வேண்டும்

திருப்பூர், செப். 3 - மாணவிகள் சமூக அக்கறையுள்ள தொழில் முனைவோராக மாற வேண்டும் என்று எத்தியோப்பியா பல்கலைக்கழக கூட் டுறவுத்துறை பேராசிரியர் டாக்டர் கருணா கரன் கேட்டுக்கொண்டார். திருப்பூர் அருகே வஞ்சிபாளையம் தீரன்  சின்னமலை மகளிர் கலை, அறிவியல் கல்லூ ரியில் வணிகவியல் மற்றும் மேலாண்மை துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் செவ் வாயன்று நடைபெற்றது. இந்த கருத்தரங் கிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ரேச்சல் நான்சி பிலிப் தலைமை ஏற்றார். ‘சமூகத் தொழில் முனைவோர் முயற்சியின் செயல் திறன்’ என்ற தலைப்பில் எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த ஹவாசா பல்கலைக்கழக கூட்டுறவு துறை பேராசிரியர் டாக்டர் கரு ணாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.  அப்போது அவர் பேசுகையில், இன்றைய  சூழலில் தொழில்கள் அனைத்தும் லாபத்தை யும், பங்குதாரர்களையும் மட்டுமே மைய மாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கி றது. இந்த அணுகுமுறையின் காரணமாக  இடைத்தரகர்கள் மட்டுமே பயன் பெறுகி றார்கள். இந்த நிலை மாற வேண்டும். தொழில்  முனைவோர் தங்களுக்கான சமூக அக்கறை யுடன் செயல்பட வேண்டும். ஒவ்வொரு தொழிலும் சமூக பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும். வறுமையின்மை, பசி ஒழிப்பு, அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் நல் வாழ்வு, அனைவருக்கும் தரமான கல்வி,  மலிவான மற்றும் சுத்தமான ஆற்றல் போன்ற  இலக்குகளை அடைய தொழில் முனைவோர்  ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும். சமூகத் தொழில் முனைவோர் பட்டியலில் இந்தியா 14ஆவது இடத்தில் உள்ளது. குறிப்பாக இதில் பெண்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.  மாணவிகளும் தங்க ளுடைய படைப்பாற்றல்களையும், புதுமை  எண்ணங்களையும் கொண்டு ஒவ்வொருவ ரும் சமூக அக்கறையுள்ள தொழில் முனை வோர்களாக மாற வேண்டும், என்று கூறி னார். இந்த நிகழ்ச்சியில் வணிகவியல் துறை,  வணிகம் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை, வணிகம் மற்றும் தொழில் பகுப் பாய்வுத் துறை, வணிக மேலாண்மை துறை  மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். கருத்தரங்கில், கல்லூரி பேராசிரியர்கள் காயத்ரி, கற்பகவல்லி, பூரணிமா, சந்திரகலா,  கவிதா மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் ஏற்பா டுகளை செய்திருந்தனர். முடிவில் வணிக வியல் துறைத் தலைவர் காயத்ரி நன்றி கூறி னார்.

கல்குவாரி செயல்பட எதிர்ப்பு

திருப்பூர், செப். 3- சூழலியல் மாசு ஏற்படுவதால் கல்குவாரிகள் செயல்பட  அனுமதிக்கக்கூடாது என ஊத்துக்குளியில் நடைபெற்ற  கருத்துக்கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தி உள் ளனர். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அப்பகுதி யில் உள்ள குவாரிகளின் உரிமத்தை புதுப்பித்து மீண்டும்  குவாரிகளை இயக்குவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடை பெற்றது.  இதில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குவாரிகள் இயங்குவதால் சுற்றுச்சூழல் மாச டைவதாகவும், குவாரிகளில் அதிக அளவில் வெடி பொருட் கள் வெடிப்பதால், வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும் அதே போல் காலாவதியான உரிமத்தை வைத்துக் கொண்டு குவாரி கள் நடத்துவதாகவும் குற்றம் சாட்டினர். எனவே மாவட்ட நிர் வாகம் குவாரிகளை  நடத்த அனுமதிக்க கூடாது என அதிகா ரிகளிடம் தங்கள் கருத்தைத் தெரிவித்தனர். இப்பகுதிகளை  சேர்ந்த பொதுமக்கள் சிலர் குவாரிகளை நம்பி  வாழ்வாதரம்  நடத்தி வருவதாகவும், எனவே கல் குவாரிகளை தொடர்ந்து  இயக்க அனுமதிக்க வேண்டும் எனக் கூறினர். இதை அடுத்து  இரு தரப்பினரின் கருத்துக்களையும் பதிவு செய்து கொண்ட  அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திடம் இது குறித்து தெரிவித்து  ஒரு வார காலத்திற்குள் குவாரிகளை இயக்குவது குறித்து  முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு

கோவை, செப்.3 வெள்ளப் பெருக்கு காரணமாக கடந்த இரண்டு மாத காலமாக மூடப்பட்டு இருந்த  கோவை குற்றாலம் செவ்வாயன்று மீண்டும் திறக்கப்பட்டது.  கோவை மாவட்டத்தின் பிரதான சுற்று லாத் தலமாக கோவை குற்றாலம் விளங்கு கிறது. மேற்குத் தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்து உள்ள இந்த அருவியில் அவ் வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுவ தால் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை  தடை விதிக்கப்படுகிறது.  இதனிடையே கனமழை மற்றும் வெள் ளப்பெருக்கு காரணமாக, கடந்த ஜூன்  மாதம் 26 ஆம் தேதியன்று கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்தது. இந்நிலையில், அருவியில் நீர்வரத்து  சீரானதை அடுத்து, 2 மாதங்களாக மூடப்பட்டு இருந்த கோவை குற்றாலம் செவ்வாயன்று  முதல் மீண்டும் திறக்கப்படுவதாக வனத் துறை அறிவித்துள்ளது.

அரசு பேருந்து பலகையில் விரிசல் - 2 பேர் பணியிடை நீக்கம்

கோவை, செப்.3- அரசு பேருந்தில் பலகையில் விரி சல் ஏற்பட்டு சக்கரம் தெரிவது குறித்து, பயணி கேள்வி எழுப்புகை யில், பயணியுடன், நடத்துநர் வாக்கு வாதம் செய்த வீடியோ வைரலான நிலையில் கிளை மேலாளர் மற்றும்  உதவி பொறியாளர் ஆகியோர்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள னர். கோவை மாவட்டம், ஒண்டிப்பு தூர் போக்குவரத்து பணிமனையில் இருந்து தினமும் TN38N2658 என்ற  பதிவு எண் கொண்ட பேருந்து  சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தி லிருந்து குரும்பபாளையம் வரை இயக்கப்படுகிறது. இப்பேருந்து திங்களன்று இயக்கப்பட்ட போது பேருந்தில் இருக்கையின் கீழ் இருந்த பலகையில் விரிசல் ஏற் பட்டு, பேருந்தின் சக்கரங்கள் தெரிந் துள்ளது. இது குறித்து நடத்துனரு டன் பயணி ஒருவர் கேள்வி எழுப்பி யுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற் பட்டுள்ளது. இதனை மற்றொரு பயணி அதை வீடியோ பதிவு செய்து  இணையதளத்தில் பதிவிட்டார். இந்த காட்சிகளானது சமூக வலைத ளங்களில் வைரலானது. இந்நிலையில், பலகையில் விரிச லுடன் பேருந்தை வழித்தடத்தில் இயங்க அனுமதித்த கிளை மேலா ளர் மணிவண்ணன் மற்றும் உதவி  பொறியாளர் சீனிவாசன் ஆகியோர்  மீது துறை ரீதியான நடவடிக்கை யாக தற்காலிக பணி நீக்கம் செய்து  கோட்ட மேலாளர் ஸ்ரீதர் உத்திரவிட் டுள்ளார். மேலும், உடனடியாக பேருந்தை சரி செய்யவும் அறிவு றுத்தபட்டுள்ளது.

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி குளிப்பதற்கான தடை நீட்டிப்பு

தருமபுரி, செப்.3- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்துள்ள தால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் அருவியில் குளிப்பதற்கு விதிக் கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நீட்டிக்கப் பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பி டிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், கபிணி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளி யேற்றப்பட்டது. இதன் காரணமாக, ஒகேனக் கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வரை அதிகரித்ததால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி ஞாயிறன்று காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கும், அருவிக ளில் குளிப்பதற்கும் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தடை விதித்திருந்தார்.  இந்நிலையில், திங்களன்று காலை நில வரப்படி 18 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து சரிந்தது. இதனால், காவிரி ஆற்றில் சின்னாறு  பரிசல் துறையில் இருந்து மணல்மேடு வரை பரிசல்களை இயக்குவதற்கு மாவட்ட ஆட்சி யர் கி.சாந்தி அனுமதி அளித்துள்ளார். இருப் பினும் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால், தொடர்ந்து சுற்றுலாப் பய ணிகள் அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப் பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உதகையில் 2 ஆவது சீசன் துவக்கம்

உதகை, செப்.3- நீலகிரி மாவட்டத்தில் 2 ஆவது சீசன் துவங் கியுள்ள நிலையில், சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது.  நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை இரண்டாவது சீசன் காலமாகும். இந்த சமயத்தில் உதகையில் நிலவும் குளு குளு காலநிலையை அனுப விக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லுகின்றனர். இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான 2 ஆவது சீசன் துவங்கியுள்ள நிலையில், கடந்த ஜூலை மாத இறுதியில் கேரளா மாநி லம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் கேரள சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. இதனால், தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத்  தலங்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப் பட்டது. இச்சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் கடந்த நிலையில் தற்போது கேரள சுற்று லாப் பயணிகள் வரத் துவங்கியுள்ளனர். குறிப்பாக, வார நாட்களை காட்டிலும் வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் வருகை அதிகமாக உள்ளது. இதனால் 2 ஆவது சீசன் மெல்ல மெல்ல களைக்கட்ட துவங்கியுள்ளது.

பேச்சுப்போட்டி

நாமக்கல், செப். 3- பேச்சு போட்டி நடைபெற உள்ளது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்  டுள்ள செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளதா வது,     தமிழ் வளர்ச்சித்துறை யின் சார்பில் நாடுக்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாள் விழா வினை முன்னிட்டு மாவட்ட அள வில் பேச்சு போட்டி நடை பெற உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துக்கொள்ளலாம். இந்த பேச்சுப்போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப்ப டவுள்ளன. 2024 - 2025 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு செப்.12 மற்றும் செப்.13 அன்று பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள அரசு பெண்கள் மாதிரி மேல்நி லைப்பள்ளியில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட் டுள்ளது.