districts

img

சாலையை சீரமைக்க வலியுறுத்தி வாலிபர் சங்கம் கையெழுத்து இயக்கம்

திருப்பூர், ஜூன் 4 - திருப்பூர், கோல்டன் நகரில் மிகவும் மோசமான நிலையில் உள்ள குண்டும், குழியுமான சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி, கோல்டன் நகர்  பகுதி மக்கள் தினந்தோறும் பயன்படுத்தி வரும் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்லும் பொதுமக்களும் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, திருப்பூர் மாநக ராட்சி நிர்வாகம் இச் சாலையை விரைந்து சீர மைக்க வலியுறுத்தி இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கம்  திருப்பூர் வடக்கு மாநகர  கோல்டன் நகர் கிளை  சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப் பட்டது. ஞாயிறன்று கோல்டன் நகர் கிளை  செயலாளர் பிரனேஷ் தலைமையில் நடத் தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் வாலிபர்  சங்க வடக்கு மாநகர செயலாளர்  விவேக்,  வடக்கு மாநகர கமிட்டி உறுப்பினர்கள்  பிரவீன் குமார் மற்றும் சீனிவாசன், மார்க் சிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகர கமிட்டி  உறுப்பினர் மனோகர் ஆகியோர் கலந்து  கொண்டனர். இப்பகுதி பொதுமக்களை  சந்தித்து கையெழுத்து பெறப்பட்டது.