திருப்பூர், அக். 13- திருப்பூரில் குண்டும் குழியுமாக மழை நீர் தேங்கி சேரும் சகதியுமாக மாறிய சாலையை செப்பனிடக் கோரி வாலிபர் சங்கத்தினர் மீன் வளர்க்கும் போராட்டம் அறிவித்தனர். இந்த அறி விப்பை தொடர்ந்து மாநகராட்சி அலுவ லர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் மண் ணைக் கொட்டி செப்பனிட்டனர். திருப்பூர் அவிநாசி சாலை குமார் நகர் சந்திப்பு முதல் சிறுபூலுவபட்டி வரை உள்ள சாலை குண்டும் குழியு மாக, சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் குளம் போல் சேற்று நீர் தேங்கி இருந்தது. பொதுமக்கள் போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்திய இந்த சாலையில், சீரமைப்பு செய்ய வலியு றுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தினர் புதன் கிழமை மாலை, மழை நீரில் மீன் வளர்க்கும் போராட்டம் நடத் துவதாக அறிவித்தனர். வாலிபர் சங்கத்தின் வடக்கு மாநகர குழு உறுப்பினர் அப்துல் தலைமையில் மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடு களை கண்டித்து வாலிபர் சங்கத்தினர் முழக்கங்களை எழுப்பினர். இந்த நிகழ் வில் வடக்கு மாநகரத் தலைவர் சே.கண் ணன், மாநகர செயலாளர் எஸ்.விவேக், மாநகர பொருளாளர் கிருத்திகை வாசன், மாவட்ட குழு உறுப்பினர் பிர வீன் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தின் நோக்கங் களை விளக்கி வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செ.மணிகண் டன் உரையாற்றினார். இந்த போராட்டத்தை முன்னிட்டு மாநகராட்சி அதி காரிகள் அங்கு வந்து வாலிபர் சங்க நிர்வாகியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் திங்களன்று காலை, சாலை முழுவதும் சீரமைக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதன் அடிப்படையில் போராட்டம் நிறைவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்தை நிறைவு செய்து சி.ஐ.டி.யு. மாவட்ட குழு உறுப்பினர் கே.நாகராஜ் உரையாற்றி னார். போராட்டத்தில் பங்கேற்றவர்க ளுக்கு மாநகர குழு உறுப்பினர் மனோஜ் நன்றி கூறினார்.