திருப்பூர், ஜூன் 5- பள்ளி குழந்தைகளுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர கோரி வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று மனு அளிக் கப்பட்டுள்ளது. பல்லடம் ஒன்றியம், காளி வேலம்பட்டி கிளை பகுதியில், சாமிக்கவுண்டம்பாளையத் தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளிக்கு 70 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் சென்று வருகின்றனர். ஆனால் தற்போது வரை பேருந்து வசதி இல்லை. உட னடியாக பள்ளி குழந்தைகளுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர கோரி வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் அருள், பல்லடம் ஒன்றிய செயலாளர் சி.முருகேஷ் மற்றும் காளிவேலம் பட்டி கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண் டனர்.