districts

img

“சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் கோவில்”

சேலம், ஜூலை 11- சமூக விரோதிகளின் கூடார மாக மாறி உள்ள திருக்கோவிலை பராமரித்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என வலியுறுத்தி இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் கையெழுத்து இயக்கத்தில் ஈடு பட்டனர்.  சேலத்தில் ஆன்மீக  தலங்க ளில் சிறப்பு மிக்க ஒன்றாக குமரகிரி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருப்பணிகள்  கடந்த 7 ஆண்டுகளாக ஆமை வேகத்தை விட மெதுவாக நடைபெற்று வரு கிறது. சில ஆண்டுகளாக எந்த பணி களும் நடைபெறாமல் உள்ளது. இத னால், இந்த கோவிலுக்குள் சமூக  விரோதிகள் உள்ளே நுழைந்து, மது அருந்தும் பாராக மாற்றி வரு கின்றனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும், இப்பகுதி மக்களுக்கும் பாதுகாப்பாற்ற சூழ் நிலை உள்ளது.  அரசு இப்பிரச்சனையில் தலை யீடு செய்து, கோவில் திருப்பணி களை உடனடியாக முடித்து கும்பா பிஷேகம் நடத்த வேண்டும். போலீ சார் அடிக்கடி கோவில் பகுதியில் ரோந்து சென்று சமூகவிரோதி களை விரட்டியடிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர். சேலம் கிழக்கு மாநகரம், அம் மாப்பேட்டை கிளை சார்பில் நடை பெற்ற கையெழுத்து இயக்கத்தில், சங்கத்தின் மாவட்ட செயலாளர்  பெரியசாமி உள்ளிட்ட வாலிபர் சங்க தலைவர்கள் பங்கேற்றனர்.