districts

img

அடிப்படை வசதிகள் கேட்டு வாலிபர் சங்கம் முற்றுகை

உதகை,பிப். 7- அடிப்படை வசதி கேட்டு நெல்லி யாளம் நகராட்சி அலுவலகத்தை முற் றுகையிட்டு போராட்டம் நடத்த திரண்ட இந்திய ஜனநாயக வாலி பர் சங்க நிர்வாகிகளிடம் அதிகாரி கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.  நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்கு கள், நடைபாதை உள்ளிட்ட வசதி களை நிறைவேற்ற வலியுறுத்தி இந் திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார் பில் நெல்லியாளம் நகராட்சி அலுவ லகத்தை முற்றுகையிடும் போராட் டம் நடத்துவதாக அறிவித்திருந்த னர். இந்நிலையில், இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் செவ்வா யன்று நெல்லியாளம் நகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட் டம் நடத்துவதாக திரண்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி னர்.  நெல்லியாளம் நகராட்சி அலுவ லக வளாகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், கூடலூர் கோட்டாட்சி யர் முகமது குதரதுல்லா, நெல்லியா ளம் நகராட்சி ஆணையாளர் குமரி மன்னன், நகர்மன்ற தலைவர் சிவ காமி, பணி மேற்பார்வையாளர் சிவ பாக்கியம், பந்தலூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பி செந்தில் குமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள்,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் ஒன்றியச் செயலாளர் ராசி ரவிக்குமார்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இதில், பல்வேறு உறுதிகளை அதிகா ரிகள் வாலிபர் சங்கத்தலைவர்களி டம் அளித்தனர். இதனையேற்று போராட்டம் தாற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தெரிவித்தனர். இது குறித்து ஆணையாளர் குமரி  மன்னன் கூறுகையில், ‘‘நெல்லியா ளம் நகராட்சி பகுதிகளில் பல்வேறு  வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதில், தாங்கள் முன் வைத்த கோரிக்கைகளையும் பரிசீ லித்து உரிய நடவடிக்கை எடுப் போம்’’ என்றார்.