சேலம், மார்ச் 12- கலைப் பண்பாட்டுத் துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட, 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள், கலை பண்பாட் டுத்துறை சார்பில் நடத்திட தமிழ்நாடு அரசு உத்தரவிட் டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாவட்ட அளவிலான இளைஞர் கலைப் போட்டிகள் நடைபெற்றது. கிராமிய நடனம், ஓவியப்போட்டி, குரலிசை போட்டி, கருவி இசைப் போட்டி என ஐந்து பிரிவுகளில் நடத்தப்பட்டது. குறிப்பாக, கிராமிய நடனம், கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு கிராமிய நட னத்தில் இளம் பெண்கள் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பாரம்பரிய கலையான சிலம் பாட்டம் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர். ஓவிய போட்டியில் மாணவர்கள் பங்கேற்று ஓவியங்களை வரைந்தனர். இதில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க உள்ளனர்.