பாலியல் தொல்லை: வாலிபர் கைது
நீலகிரி, நவ.14- உதகை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வட மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சோம்ரா ஓரான்(20). இவர் நீலகிரி மாவட்டம், உதகை அடுத்த மஞ்சூர் பகுதி யில் உள்ள தனியார் எஸ்டேட்டில் கடந்த ஒரு வருடமாக பணி யாற்றி வருகிறார். எஸ்டேட் நிர்வாகத்திற்கு சொந்தமான குடியிருப்புகளில் வசித்து வரும் ஓரான், அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியின் 5 வயது மகளை, ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்து, மிரட்டி யதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி யடைந்த சிறுமியின் பெற்றோர், உதகை ஊரக காவல்நிலை யத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், சோம்ரா ஓரானை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வடமாநிலப் பெண் பலி
கோவை, நவ. 14- தனியார் மில் குடியிருப்பில் வடமாநில பெண் தொழி லாளி திடீரென உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஜெய்னால் ஷேக். இவரது மனைவி சாருசர்மார்(42). இவர்கள் இருகூர் குரும்ப பாளையம் சாலையில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் மில்லில் வேலை பார்த்து வருகின்றனர். மில் வளாக குடியி ருப்பில் தங்கி வேலைக்கு சென்று வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஜெய்னால் ஷேக் தனது சொந்த ஊரான கொல்கத்தா சென்றதாக கூறப்படுகிறது. வீட்டில் சாருசர்மார் மட்டும் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், திங்களன்று மதியம் சாருசர்மார் உடலில் காயத்துடன் உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்து, தகவ லறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிங்காநல்லூர் போலீ சார், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பெண் ஒருவர் உட லில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது பல்வேறு சந்தே கத்தை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, சந்தேக மர ணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.
மழையால் தேங்கிய பூக்கள்: விவசாயிகள் கலக்கம்
தருமபுரி, நவ.14- தருமபுரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக, பூக்கள் விற்பனையாகமல் உள்ளதால் விவசா யிகள் கவலை அடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் பாலக் கோடு, மாரண்டஅள்ளி, பெலமார னஅள்ளி, திருமல்வாடி, கரகூர், ஐந்து மைல்கள், பாப்பாரப்பட்டி, பென் னாகரம், இண்டூர், அதக்கப்பாடி, பால வாடி, நல்லம்பள்ளி, தொப்பூர், சாமி செட்டிபட்டி, கெட்டூர், மொரப்பூர், பாப்பி ரெட்டிப்பட்டி, கம்பைநல்லூர், பிக்கிலி மலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கரில் பூக்கள் சாகுபடி செய்து வருகின்ற னர். இங்கு விளையும் சாமந்தி, செண்டு மல்லி, கனகாம்பரம், சம்பங்கி, பன்னீர் ரோஸ், சன்னமல்லி, குண்டுமல்லி, கோழி கொண்டை, அரளி, கனகாம்ப ரம் உள்ளிட்ட மலர்களை விவசாயிகள் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்கின் றனர். இந்நிலையில் செவ்வாயன்று சம்பங்கி கிலோ ரூ.20, சாமந்தி ரூ.50, பன்னீர் ரோஸ் ரூ.100, அரளி ரூ.100, சன்னமல்லி கிலோ ரூ.400, குண்டு மல்லி கிலோ ரூ.400, கனகாம்பரம் ரூ.60, என்ற நிலையில் விற்பனை செய்யப்பட்டிருந்தது. ஆனால், தொடர் சாரல் மலையால் நல்ல விலை இருந் தும் பூக்களை வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வராததால் பூக்கள் விற்பனையாகமல் தேங்கியுள் ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
கோவையில் நகை திருட்டு
கோவை, நவ.14- கோவை சேரன்மாநகரில் வசித்து வருபவர் ரமேஷ்குமார் (36). ஐடி ஊழியரான இவர், கடந்த 9ம் தேதி வீட்டை பூட்டி விட்டு கிருஷ்ணகிரி சென்றார். பின்னர் அங்கிருந்து திங்க ளன்று கோவை திரும்பினார். வீட்டுக்கு சென்று பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார் கையில் போது பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ஒரு வாட்ச் திருடு போயிருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டுக்குள் புகுந்து திருடி சென்றுள்ளனர். இது குறித்து ரமேஷ்குமார் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்குபதிவு செய்த போலீசார் தடயங்களை கைப் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
கோவை, நவ.14- கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்து வமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்களன்று இரவு திடீர் ஆய்வுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவ கவனிப்பு முறை மற்றும் தேவையான வசதிகள் குறித் தும் கேட்டறிந்தார். தொடர்ந்து மருத்துவ மனையில் பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் எண்ணிக்கை குறித்தும் மருத்துவமனை முதல்வரிடம் கேட்டறிந் தார். பின்னர், மருத்துவமனை வளாகத்தில் பொதுப்பணி துறையின் மூலம் மேற்கொள் ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள், செயற்கை அவையவங்கள் பிரிவு பணிகள் குறித்தும், பொதுப்பணித்துறை அலுவ லர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், உணவு கூடம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, விஷ முறிவு மருத்துவம் ஆகியவற்றில் நேரில் பார்வையிட்டார். உணவுக் கூடத்தில் மருத்துவமனை நோயாளிகளுக்கு வழங்கப் படும் உணவு தரம் குறித்து உண்டு பரிசோதித் தார். மேலும், உடன் வரும் பொது மக்கள் இருக்க போதுமான அளவு இருக்கைகள் ஏற்படுத்தித் தரவும் மருத்துவமனை நிர்வா கத்திற்கு உத்தரவிட்டார்.
முகத்தில் பட்டாசை வீசி அட்டகாசம்
கோவை, நவ.14- கோவையில் மது போதையில் அட்டகாசம் செய்த இளை ஞர்களை தட்டிக்கேட்டவரின் முகத்தில் பட்டாசை வீசிய சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பீளமேடு கோபால்நாயுடு பள்ளி பின்புறம் முன்னாள் காங்கிரஸ் எம்.பி., பிரபுவின் பழைய வீடு உள்ளது. தற்போது அங்கு யாரும் இல்லாததால் பாழ டைந்துள்ளது. இந்த நிலையில் தீபாவளியன்று இரவு அங்கு வந்த 6 பேர், மது போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அருகில் வசித்து வரும் பாலசுந்தரம் என்ப வர் கேள்வி கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர்கள் அவரது முகத்தி லும், வீட்டிற்குள்ளும் பட்டாசுகளை கொளுத்தி வீசி சென் றுள்ளனர். இது குறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளி யாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும், போலீசார் ரோந்து பணிகளை மேற் கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கூட்டுறவு பண்டக சாலை மூலம் ரூ.1 கோடிக்கு பட்டாசு விற்பனை
சேலம், நவ.14- சேலம் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு பண்டக சாலை மூலம் ரூ.1 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட் டுள்ளன. இதுதொடர்பாக சேலம் மாவட்ட கூட்டுறவுத்துறை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஒவ்வொரு வருடமும் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் பட்டாசு விற்பனை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டத்திலுள்ள கூட்டுறவு பண்டக சாலை மூலம், சிவகாசி யில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பட்டாசுகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து பட்டாசுகள் கொள்முதல் செய்யப் பட்டு விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டது. அதன்படி, பொன்னி கூட்டுறவு பண்டகசாலை மூலம் ரூ.70 லட்சம், சேலம் கூட்டுறவு வேளாண்மை விற்பனை சங்கம் மூலம் ரூ.9 லட்சம், ஆத்தூர் கூட்டுறவு வேளாண்மை விற் பனை சங்கம் மூலம் ரூ. 7.50 லட்சம், என்.ஜி.ஜி.ஓ கூட்டுறவு பண்டக சாலை மூலம் ரூ.4 லட்சம், சுவர்ணபுரி கூட்டுறவு பண் டகசாலை மூலம் ரூ.6 லட்சம், இளம்பிள்ளை கூட்டுறவு பண்டக சாலை மூலம் ரூ.2 லட்சம், காடையாம்பட்டி கூட்டுறவு பண்டக சாலை மூலம் ரூ.1.50 லட்சம் ஆக மொத்தம் ரூ.1 கோடி மதிப்பி லான பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டது. கூட்டுறவு பண் டக சாலைகள் மூலம் தள்ளுபடி விலையில் தரமான பட்டாசு கள் விற்பனை செய்வதால் பொதுமக்கள் அதிகளவில் ஆர் வத்துடன் வந்து வாங்கிச் சென்றனர். இந்த பட்டாசு விற்பனை யானது கடந்த ஆண்டை விட 20 சதவிகிதம் கூடுதலாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்காடு பனி மூட்டத்தை ரசித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
சேலம், நவ.14- ஏற்காட்டில் நிலவிவரும் பனி மூட்டத்தை ரசிக்க ஏராள மான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சேலம் மாவட்டம், ஏற்காடு சுற்றுலா தலமாக உள்ளது. ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுகிற இங்கு, லேசான சாரல் மழை மற்றும் பனி மூட்டம் அதிகமாக காணப்படு கிறது. இந்நிலையில், திங்களன்று இரவு விடியவிடிய சாரல் மழை பெய்தது. விடியற்காலையில் ஏற்காடு முழுவதும் அடர்த்தியான பனி மூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஏற் காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களாக அண்ணா பூங்கா, ஏரிபூங்கா, லேடிசீட், பக்கோடா பாயின்ட், ரோஜா தோட்டம், சேர்வராயன் குகை கோயில், பொட்டானிக்கல் கார்டன், ஐந்தினை பூங்கா போன்ற இடங்கள் உள்ளது. செவ்வாயன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர்.
விவசாயி மீது துப்பாக்கி சூடு: போலீசார் விசாரணை
சேலம், நவ.14- கல்வராயன் மலை அருகே வனப்பகுதி யில் ஆடுகளுக்கு தழை பறிக்க சென்ற விவ சாயி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்ப வம் குறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம் அருகே உள்ள கல்வராயன் மலை, வேலம்பட்டி நடுவீதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் ராஜூ (33). விவசாயி யான இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவருக்கு வேலம்பட்டியில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில், திங்களன்று மாலை ராஜூ, வனப்பகுதிக்கு சென்று ஆடுக ளுக்கு தழைகளை சேகரித்துக் கொண்டி ருந்தார். அப்போது திடீரென துப்பாக்கி சத் தம் கேட்டதுடன் ராஜூவின் இடதுகால் முட்டி மற்றும் வலது கால் தொடை பகுதியில் துப் பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இதில் காயம டைந்த ராஜூ மயங்கி விழுந்தார். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த அவர், தனது உறவி னர் ராமன் என்பவருக்கு போன் செய்து தக வல் தெரிவித்தார். உடனடியாக ராமன் சம்பவ இடத்துக்கு சென்று ராஜூவை மீட்டு, காரில் ஏற்றிச்சென்று வாழப்பாடியில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த் தார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், மேல் சிகிச்சைக்காக காரிப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த் தார். அவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த காயம் இருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் கரிய கோவில் போலீசார் ராஜூவிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ராஜூவை துப்பாக்கி யால் சுட்ட நபரை வனப்பகுதியில் தேடி வ ருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மருதமலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி
கோவை, நவ.14- மருதமலை முருகன் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதை ஒரு மாதமாக மூட்டப்பட்ட நிலையில், திங்களன்று முதல் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவை பிரசத்தி பெற்ற முருகன் கோயிலான மருதமலை மலைக்கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்வதற்கு இரண்டு பாதைகள் உள்ளது. ஒன்று வாகனங்களில் செல்லும் சாலைப்பாதை, மற்றொன்று படிக்கட்டுகள் உள்ள பாதை. வாகனங்கள் செல்லும் மலைப்பாதை கடந்த ஒரு மாதமாக புனரமைக்கப்பட்டு வந்தது. இதனால், அவ்வழி மூடப்பட்டு படிக்கட்டுகள் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் பணிகள் முடிந்ததையடுத்து திங்களன்று முதல் சாலை வழிப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்
ஈரோடு, நவ.14- ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் நாள் முகாம் நவ.18 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. அனைத்து வட்டங்களிலும் நடைபெறும் இம்முகா மில் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், கைபேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொது மக்கள் மனுக் கள் மூலம் தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் விடுத்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
போதையில் கார் ஓட்டியவருக்கு அபராதம்
ஈரோடு, நவ.14- மதுபோதையில் அதிவேகமாக காரை இயக்கியவருக்கு போலீசார் அபராதம் விதித்து, காரை பறிமுதல் செய்த னர். ஈரோடு, திண்டல் பகுதியில் ஞாயிறன்று இரவு வாகன ஓட்டி களை அச்சுறுத்தும் வகையில், அதிவேகமாகக் கார் ஒன்று சென்றது. கையில் பீர் பாட்டிலுடன், காரில் தொங்கியபடி சென்று கொண்டிருந்த இளைஞர்களை காவல் துறையினர் மடக்கி பிடித்தனர். இதையடுத்து காரை பறிமுதல் செய்த போலீசார், மோட்டார் வாகனச் சட்டப்படி ரூ.19 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
தீ விபத்தில் 14 வாகனங்கள் சேதம்
கோவை, நவ.14- கவுண்டம்பாளையம் அருகே கார் பழுதுபார்க்கும் கடை யில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 கார்கள் தீக்கிரையாகிய சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் அருகே உள்ள அசோக் நகரில் தனியாருக்கு சொந்தமான கார்கள் பழுது பார்க்கும் கடை ஒன்று உள்ளது. இக்கடையில் நான்கு சக்கர வாகனங்களுக்கான டிங்கரிங் மற்றும் பெயிண்டிங் வேலை கள் நடைபெற்று வந்தன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடைக்கு விடுமுறை விடப்பட்டு, பூட்டி வைக்கப்பட்டிருந் தது. இந்நிலையில், செவ்வாயன்று காலை கடையிலிருந்து திடீரென புகை எழுந்தது. அங்கிருந்து வெளியேறிய புகை அப்பகுதி முழுவதையும் புகை மூட்டமாக்கியது. இதுகுறித்து அப்பகுதியினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்த னர். அதன்பேரில் கவுண்டம்பாளையத்தில் உள்ள வடக்கு தீய ணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் ரமேஷ்குமார் தலைமையி லான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப் போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 14 கார்கள் தீப்பி டித்து எரிந்து கொண்டிருந்தன. சுமார் 1.30 மணி நேர போராட் டத்துக்கு பின் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இருந்தா லும் அங்கு நின்றிருந்த 14 கார்களும் தீக்கிரையாகின. இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளை மின்தடை
சேலம், நவ.14- அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் வியாழனன்று (நாளை) மாதாந்திர பராம ரிப்பு பணிகள் நடைபெற உள் ளது. இதனால் அஸ்தம்பட்டி, காந்திரோடு, வின்சென்ட் மர வனேரி, மணக்காடு, சின்ன திருப்பதி, ராமநாதபுரம், கன் னங்குறிச்சி, புது ஏரி, ஹவு சிங் போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, அழகாபுரம், நக ரமலை அடிவாரம், ஏற்காடு ஆகிய பகுதிகளில் வியாழ னன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநி யோகம் இருக்காது.