திருப்பூர் தொழிலை பாடையில் ஏற் றிய மோடிக்கா உங்கள் வாக்கு என்று நவீன மனிதர்கள் இயக்கத்தினர் நூதன பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது பாடையை போலீசார் பறித்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. திருப்பூரில் நவீன மனிதர்கள் இயக் கத்தினர் மோடி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், மதவெறுப்பு அரசியலுக்கு எதிராகவும் இந்தியா கூட்டணியை ஆத ரித்து பல்வேறு நூதன வழிகளில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதி யாக வியாழனன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில், திருப்பூர் தொழிலை பாடையில் ஏற்றிய மோடிக்கா, உங்கள் வாக்கு? என்ற பதாகையுடன் பரப்புரை இயக்கம் மேற்கொண்டனர். அப்பொ ழுது ஒரு பாடையை தயாரித்து அதில் பின்னலாடை தொழிலை ஏற்றும் விதத்தில் ஒரு நூதன பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய் திருந்தனர். போதும் மோடி, பை பை மோடி! என்ற முழக்கத்துடன் அவர்கள் வாகனத் தில் இருந்து பாடையை இறக்கிய போது, அந்தப் பகுதியில் பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினர் அந்தப் பாடையை வலுக்கட்டாயமாக பறித்தனர். இதனால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாடை யில் பின்னலாடை தொழிலை ஏற்றும் நிகழ்வை தடுத்தபோதும், மோடி அரசின் கொள்கைகளுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பி பிரச்சாரம் செய்த னர்.