districts

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை போக்சோவில் வாலிபர் கைது

பென்னாகரம், மார்ச் 30- தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள நடே சன்காட்டுக் கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (28). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2017 ஆம் ஆண்டு மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள் ளார். மேலும், அந்தப் பெண்ணை தனியார் கம்பெனியில் வேலைக்குச் சேர்த்துவிட்டு, தனது வங்கிக் கணக்கை கொடுத் துள்ளார். இதன் மூலம் சம்பளப் பணத்தை பெற்றுக் கொண்டு, அந்தப் பெண்ணிடம் கொடுக்காமல் ஏமாற்றி வந் துள்ளார். இதுதொடர்பாக அச்சிறுமி கடந்த மார்ச் 21 ஆம்  தேதியன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வ னிடம் புகார் மனு அளித்தார். அதன்பேரில் பென்னாகரம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரவீன்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ்கைது செய்து சிறையில் அடைத்தனர்.