districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

இளம் பெண் தற்கொலை: காவலர் கைது 

ஊட்டி, நவ.26- நீலகிரியில் இளம்பெண் தற்கொலையில் காவலர் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே அணிக்காடு பகுதி யைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவருடைய மனைவி சசி கலா (27). கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியினர் பிரிந்து  வாழ்ந்து வந்தனர். சசிகலா அதே கிராமத்தில்  உறவி னர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இதனி டையே, சசிகலாவுக்கும், மஞ்சூர் அருகே சிவசக்தி நகரை சேர்ந்தவரும், உதகையில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்த கண்ணன் என்பவருக்கும் இடையே பழக் கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்வதாக கண்ணன் ஆசை வார்த்தை கூறி சசி கலாவுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்நிலையில், தன்னை விட்டு வேறு ஒரு பெண்ணை திரும ணம் செய்ய கண்ணன் முடிவு செய்ததால் சசிகலா அதிர்ச்சி  அடைந்தார்.  இதனால் மனமுடைந்த சசிகலா விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற் கிடையே, கண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

7 ஆடுகள் பலி: விவசாயிகள் அச்சம்

சேலம், நவ.26- சங்ககிரி அருகே அடையாளம் தெரியாத விலங்கு கடித்து,  7 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி விவசாயிக ளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள அரசிரா மணி செட்டிப்பட்டி தைலாங்காடு பகுதியில் விவசாயிகள் வீடுகளில் ஆடுகளை கட்டி வைத்திருந்தனர். இந்நிலை யில், சனியன்று இரவு அடையாளம் தெரியாத விலங்கு, கந்த சாமி என்பவரின் 6 ஆடுகளையும், பழனிசாமி என்பவரின் ஒரு  ஆட்டினையும் கடித்தில் இறந்து விட்டன. மேலும், அதே பகுதியில் பல விவசாயிகளின் ஆடுகளை கடித்ததில் 10க்கும்  மேற்பட்ட ஆடுகள் பலத்த காயமடைந்துள்ளன. இச்சம்ப வம் அப்பகுதி விவசாயிகளிடையே சோகத்தையும், அச் சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், அப்பகுதியில் திரியும்  அடையாளம் தெரியாத விலங்கினை பிடிக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சிங்கவால் குரங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு

கோவை, நவ.26- வால்பாறை குடியிருப்புகளில் சிங்கவால் குரங்கு களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சம்  அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் புதுத் தோட்டம் பி.ஏ.பி.நகர், காமராஜர் நகர், துளசிங்க நகர், கூட்டு றவு காலனி, அண்ணா நகர், வால்பாறை டவுன் பகுதி உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக 100க்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் சுற்றி வருகிறது. இந்த சிங்கவால் குரங்குகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி  திரிவதோடு அங்குள்ள வீடுகளின் ஜன்னல் வழியாக சமைய லறைக்குள் நுழைந்து, அங்கு வைத்திருக்க கூடிய உண வுப் பொருட்களை சாப்பிட்டு சேதப்படுத்தி வருகிறது. இதில் ஜெபா என்பவர் வீட்டில் நுழைந்த குரங்குகள் கூட்டம் வீட்டிற்குள் இருந்த உணவு பொருட்கள் சாப்பிட்டு கண்ணாடி பொருட்களை உடைத்து சேதப்படுத்தியது. நீண்ட  நேரம் போராட்டத்திற்கு பின்பு சிங்கவால் குரங்குகள் அப்பகுதியில் இருந்து சென்றன. குரங்குகள் குடியிருப்பு பகுதியில் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குப்பை வாகனங்களை சிறைபிடித்த மக்கள்

நாமக்கல், நவ. 26- குமாரபாளையத்தில் குப்பை கொட்ட வந்த வாகனங் களை சிறைபிடித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி சார்பில்  குப்பைகள் சேகரிக்கப்பட்டு பல இடங்களில் கொட்டப்ப டுகிறது. அதில் ஒரு பகுதியாக மணிமேகலை தெருவில் உள்ள  நகராட்சி மயான வளாகத்தில் உள்ள இடத்தில் குப்பை கள் கொட்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மணிமேகலை தெரு பகுதியில் அதிக குடியிருப்புகள் உள்ளன. இங்கு அதிக அளவிலான குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால்  ஏற்படும் கொசுத்தொல்லை, துர்நாற்றம், ஆகியவற்றால்  பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே இங்கு குப்பைகள் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து,  குப்பை கொண்டு வந்த வாகனங்களை சிறைபிடித்து,  அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பேரணி, கூட்டம் நடத்த கட்டுப்பாடு

சேலம், நவ.26- சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், பல்வேறு சங்கங் கள், அமைப்பினர் உள்ளிட்டோர் நடத்தும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு மாநகர காவல் சட்டப் படி, ஆணையரிடம் அனுமதி பெற்று நடத்த வேண்டும். மேலும், இதற்கு 5 நாட்களுக்கு முன்னதாகவே விண்ணப் பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெறப்ப டும் விண்ணப்பங்கள் பரீசிலனை செய்யப்பட மாட்டாது. அதே சமயம் விளையாட்டு நிகழ்ச்சிகள், திருமண நிகழ்வுகள், இறந் தோர் இறுதி ஊர்வலங்கள், மத நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை களுக்கு இது பொருந்தாது. இந்த உத்தரவு சனியன்று முதல்  டிச.9 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஒரு டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்

நாமக்கல், நவ.26- நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட ஒரு டன் புகையி லைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டில் புகையிலைப் பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பிற மாநிலங்க ளில் இருந்து விதிகளை மீறி கடத்தி வந்து பலர் விற்பனை  செய்து வருகின்றனர். போலீசாரும் அவர்களைக் கண்ட றிந்து கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், நாமக் கல் - திருச்செங்கோடு சாலையில் போலீசார் ரோந்து  மற்றும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையோரம் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த லாரி மற்றும் சொகுசு காரை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட ஒரு டன்  புகையிலைப் பொருட்கள் 70 மூட்டைகளில் கடத்தி வந்தது  தெரியவந்தது. மேலும், பாதுகாப்புக்காக சொகுசு காரில்  நான்கு பேர் வந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து நாமக்கல் நகரப் போலீசார் புகையிலைப் பொருட்களை பறிமு தல் செய்தனர். இதுதொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த  சேர்மன் (24), அருள்ரவி (34), சிவலிங்கம் (24), வேலு கண்ணு (27) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். பறிமு தல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், சொகுசு கார்  ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.36 லட்சமாகும். இது தொடர்பாக கைதான நான்கு பேரிடமும் போலீசார் தொடர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடும் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

ஈரோடு, நவ.26- திம்பம் மலைப்பாதையில் நிலவும் கடும் பனிமூட்டத்தால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ஆச னூர் மலைப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் மக்காச் சோளம், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, காலிபிளவர், தக் காளி உள்ளிட்ட மலைக்காய்கறி பயிர்கள் அதிக அளவில் சாகு படி செய்யப்படுகின்றன. அண்மையில், பெய்த மழையால் பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்துள்ளன. இந்நிலையில், ஆச னூர் மலைப்பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக காணப் படுகிறது. ஆங்காங்கே மேக கூட்டங்கள் தரை இறங்கியது போல் பனி மூட்டம் நகர்ந்து சென்றது. மேலும், சத்திய மங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திம்பம் மலைப்பாதையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி பனிமூட்டம் இருப்பதால், வாகன ஓட்டிகள் மஞ்சள் நிற முகப்பு விளக்கை எரிய விட்டபடி செல்கின்றனர். பனி விலகாத தால் விவசாயப்பணிகள் மற்றும் கால்நடை மேய்த்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள முடியாமல் மலை கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

பில்லூர் சாலையில் யானைகள் உலா

கோவை, நவ.26- பில்லூர் - கெத்தை சாலையில் உலா வரும் காட்டுயானை கள் கூட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மேட்டுப்பாளை யம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டுயானை, மான், கரடி, காட்டெருமை, புலி, சிறுத்தை உள் ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் காணப்படுகின்றன. குறிப் பாக தமிழக, கேரள, கர்நாடக மாநிலங்களை இணைக் கும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில மாதங் களாகவே காட்டு யானைகளின் நடமாட்டம் சற்று அதிகமா கவே காணப்படுகிறது. இவை அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து விளைநிலங்களை சேதம் செய்வதோடு, பொது மக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பில்லூ ரில் இருந்து கெத்தை செல்லும் சாலையில் சாலையின் ஓரமாக யானை கூட்டம், குட்டியுடன் உலா வந்தன. இதனை அவ்வழி யாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து கடும் அச்சமடைந்தனர். தற்போது, இதுகுறித்த காணொளிக் காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றனர்.

காங்கிரஸ் அலுவலகம், அதிமுக பிரமுகர் வீட்டில் மனிதக்கழிவை வீசிய 2 பேர் கைது

கோவை, நவ.26- கோவையில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் மற்றும் அதி முக பிரமுகர் வீட்டில் மனிதக்கழிவை வீசிச்சென்ற பொதுக் கழிப்பிட பராமரிப்பு ஒப்பந்ததாரர்கள் 2 பேரை காவல் துறை யினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (61). காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த  இவர், கோவை மாமன்ற 56 ஆவது வார்டு உறுப்பினராக உள்ளார். அதேபகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (39) என்பவர், ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடத்தை பரா மரிக்கும் பணியை ஒப்பந்த அடிப்படையில் எடுத்திருந்தார். ஆனால், அவர் அந்த பொதுக்கழிப்பிடத்தை முறையாக பரா மரிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ண மூர்த்திக்கு வந்த புகாரின் அடிப்படையில் ஒப்பந்ததாரர் பிர காஷிடம், பொதுக்கழிப்பிடத்தை முறையாக பராமரிக்கு மாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனாலும், அவர் அதைக் கண்டு  கொள்ளாமல் இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, கிருஷ்ணமூர்த்தி கோவை மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளித்ததோடு, மாமன்ற கூட்டத்திலும் இதுதொடர்பாக புகார்  தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, மாநகராட்சி நிர்வா கத்தின் சார்பில் ஒப்பந்ததாரர் பிரகாஷிடம் விளக்கம் கேட்டு  நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதனால், பிரகாஷுக்கும், கிருஷ் ணமூர்த்திக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரகாஷ் தனது நண்பரும், மற்றொரு ஒப் பந்ததாரருமான ராதாகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து ஒண்டிப்புதூர், சுங்கம் மைதானத்திலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் முன்பு மனிதக்கழிவை வீசிச்சென்றுள்ளார். இதேபோல, சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் அதிமுக கிளைச்செயலாளரான பன்னீர்செல்வம் என்பவரது வீட் டின் முன்பும் மனிதக்கழிவை வீசியுள்ளனர். இதுதொடர் பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் கிருஷ்ணமூா்த்தி, பன்னீர்செல்வம் ஆகியோர் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ், ராதாகிருஷ் ணனை கைது செய்தனர். இதுதொடர்பாக பிரகாஷ் போலீசாரிடம் கூறுகையில், தான் பன்னீர்செல்வத்திடம் வேலை செய்து வந்தபோது, முறையான சம்பளம் கொடுக்காததாலும், என் மீது வார்டு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி புகார் கொடுத்ததாலும் மனி தக்கழிவை வீசி சென்றோம் எனத்தெரிவித்துள்ளார்.

பாலம் அமைக்க 20 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை

திருப்பூர், நவ.26- காங்கேயம் அருகே நொய்யல் ஆற்றை கடக்க பரிசல் பயணம் மேற் கொண்டு வரும் பொதுமக்கள், பாலம் அமைத்து தர வேண்டும் என 20 ஆண்டு களாக கோரிக்கை விடுத்து வருகின்ற னர். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுகாவிற்குட்பட்ட வெங்கலப் பாளையம் பகுதியில் இருந்து ஊத்துக் குளி பகுதிக்கு செல்ல சாலை மார்க்க மாக செல்ல 10 கிலோமீட்டர் தொலைவு  ஆகிறது. அதுவே நொய்யல் ஆற்றை  கடந்து செல்லும் போது பயண தொலைவு 2 கிலோ மீட்டராக குறை கிறது. இதனால் வெங்கலப்பாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றில் இருகரை களிலும் கம்பம் நட்டு ஆற்றின் குறுக்கே  கம்பி கட்டி அதனை பிடித்தபடி பரிச லில் செல்ல கிராம மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். கத்தாங்கன்னி, வயக் காட்டுபுதூர், கணபதிபாளையம், வெங் கலப்பாளையம் என 5 கிராம மக்கள் இந்த பரிசலை இலவசமாக பயன்ப டுத்தி வருகின்றனர். நொய்யலில் அதிக ளவில் வெள்ளம் வரும் காலங்களில் இந்த பரிசல் பயணத்தையும் பயன்ப டுத்த முடியாது என்பதால் தங்களுக்கு  இப்பகுதியில் பாலம் அமைத்து தர  வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். எனவே, இப்பிரச்சனை குறித்து அரசு விரைந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே  அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.