districts

img

சாலையில் குளம் போல் கழிவு நீர்: வாகன ஓட்டிகள் அவதி

திருப்பூர், நவ.28 - திருப்பூர் மாநகராட்சி பூலுவபட்டி வாவிபாளையம் சாலையில் குளம் போல் கழிவு நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளா கின்றனர். பூலவபட்டி வாவிபாளையம் சாலை  தினசரி ஆயிரக்கணக்கான வாகனங் கள் சென்று வரும் முக்கிய சாலையா கும். இச்சாலை வாகனங்கள் செல்வ தற்கே லாயக்கற்றதாக குண்டும், குழியு மாக உள்ளது. மழைக் காலங்களில் சாலை முழுக்க மழை நீர் தேங்கி வாக னங்கள் செல்ல முடியாத சூழல் நிலவு கிறது. இந்நிலையில் கழிவுநீரும் சாலை யில் குளம் போல் தேங்கி உள்ளது. இத னால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக் குள்ளாகின்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றிய செய லாளர் ஆர்.காளியப்பன் கூறுகையில், ஆயிரக்கணக்கான மக்கள் சென்றுவ ரும் இச்சாலை குண்டும், குழியுமாக உள்ளது. முறையாக சீரமைக்க வேண் டும் எனப் பல முறை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் பலதரப்பட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளோம். நெடுஞ்சாலை துறையினர் சாலையில்  உள்ள குழிகளில் மண் கொட்டி மூடுவார் கள். அடுத்த மழை வந்தால் குழிகளில்  கொட்டப்பட்ட மண் மழைநீரில் அடித்துச் சென்று விடும். மீண்டும் சாலை  குண்டும் குழியுமாகவே மாறிவிடும். மேலும், தோட்டத்துப்பாளையம் பகு தியில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. மாநகராட்சி நிர்வாகம் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற முறையான வடிகால் வசதி அமைத்திட வேண் டும் எனக் கோரிக்கைகள் வைத்து  வந்ததையடுத்து, ரூ.3.64 கோடி நிதி  ஒதுக்கப்பட்டு, தோட்டத்துப்பாளையம் தெற்கு லட்சுமி நகரை ஒட்டியுள்ள கழி வுநீர் ஓடையில், சாக்கடை கால்வாயை இனைக்கும் பணி நடைபெற்று வருகி றது. இப்போதைக்குத் தினசரி கழிவுநீர்  உறிஞ்சும் வாகனங்கள் மூலம் கழிவு நீரை வெளியேற்றி வருகிறார்கள். இருந் தும் சாக்கடை நீர் சாலையில் தேங்குகி றது. எனவே சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க  வேண்டும். மேலும், நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை உயரப்படுத்தி னால் மட்டுமே இப்பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றார்.