கோவை, மே 10- யோகாவில் மாநில, தேசிய, சர்வதேச அளவில் சாதனை புரிந்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த யோகா சாதனையாளர்கள் கோவையில் ஒரே இடத்தில் சந்தித்து பல்வேறு கடினமான ஆசனங்களை செய்து அசத்தினர். கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த வர் வைஷ்ணவி. கடந்த பதிமூன்று வருடங்களாக யோகாவில் பல்வேறு உலக சாதனைகளை செய்துள்ளார். இவர், அதே பகுதியில் யோவா யோகா பயிற்சி அகாடமியை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரிடம் பயிற்சி பெறும் தமிழகம் முழுவதும் உள்ள யோகா சாதனையாளர்களை ஒரே இடத் தில் சங்கமிக்கும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 34 யோகா சாதனையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ஐந்து வயது முதல் பதினாறு வயது வரையிலானோர் கலந்து கொண்ட அனைவரும் யோகா சாதனையில் கின்னஸ் சாதனை புத்த கத்தில் இடம் பிடித்துள்ளனர். மேலும், மாநில, தேசிய, சர்வதேச அளவில் யோகாவில் பல சாதனைகள் புரிந்த வீரர், வீராங்கனைகள் தாங்கள் வாங் கிய பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ்களுடன் நிகழ்ச்சி யில் கலந்து கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சான்றி தழ்கள் மற்றும் பரிசுகள் நடுவே பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினர்.