districts

img

கோடையை வரவேற்கும் ‘மே மலர்கள்’

சேலம், மார்ச் 9- ஏற்காட்டில் கோடைக்காலத்தை வரவேற்கும் வகை யில், ஊதா நிறத்தில் பூத்து குலுங்கும் ஜெகரண்டா (மே)  பூக்கள், காண்போரை கவர்ந்து வருகிறது. சேலம் மாவட்டம், ஏற்காடு சுற்றுவட்டார பகுதிக ளில், ஆங்கிலேயர் காலத்தில் காபி தோட்டங்கள் உரு வாக்கப்பட்டன. அப்போது தோட்டங்களை ஒட்டிய  சாலையோரங்களில், பல்வேறு மருத்துவக் குணங்களை கொண்ட மரங்கள் மற்றும் அழகிய பூக்கள் பூக்கும் மரங் கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டன. அதில், பசுமையான காபி தோட்டங்களுக்கு மத்தியில், ஊதா நிறத்தில் பூத்து குலுங்கும் ஜெகரண்டா பூக்கள் மரங் கள் அதிகளவில் வளர்க்கப்பட்டன. தற்போது, ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரத்தில் ஊதா நிறத் தில் பூக்கள் பூத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வை யாளர்களை கவர்ந்து வருகிறது. இவ்வழியாக செல்லும் பயணிகள் இந்த பூக்களை பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர். கோடையை வரவேற்கும் இந்த ஜெகரண்டா மலர்களின் காய்கள் பெயின்ட் தயாரிக்கும் மூல பொருளாகவும், இந்த மலர் மற்றும் இலைகள் மருத்துவக்குணம் நிறைந்தவையாகவும் உள்ளன.