சேலம், மே 25- சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை மகிழ் விக்கும் வகையில் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்காட்சி ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 45 ஆவது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியினை புதனன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், சுற்றுலாத் துறை அமைச் சர் மருத்துவர். மா.மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாப் பேருரை ஆற்றினர். இந்த கோடை விழாவில் குழந் தைகள், சுற்றுலாப் பயணிகள் என அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் வகையில் தோட்டக்கலை - மலைப் பயிர்கள் துறையின் சார் பில் அண்ணா பூங்காவில் 5 லட்சம் அரிய மலர்களைக் கொண்டு மலர் கண்காட்சி, பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சிகளும் அமைக் கப்பட்டுள்ளது. மேலும், அனைத்துத் துறைகளையும் ஒருங் கிணைந்து தமிழக அரசின் திட்டங் கள் மற்றும் சாதனைகளை விளக் கும் வகையில் பல்துறை பணி விளக்க முகாம் நடத்தப்படவுள் ளது.
குறிப்பாக, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் “ஓயா உழைப்பின் ஓராண்டு “ சாதனை விளக்கப் புகைப்படக் கண் காட்சி, கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் செல்லப் பிரா ணிகள் (நாய்கள்) கண்காட்சி, ஒருங் கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழு கொழு குழந்தைகள் போட்டி, பாரம் பரிய உணவுப் போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலாத் துறையின் சார்பில் படகு போட்டிகள் உள்ளிட்டவைகள் நடத்தப்பட உள்ளது. மேலும், சுற் றுலாப் பயணிகளை மகிழ்விக் கும் வகையில் சர்வதேச திரைப் படங்கள், இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் வண்ணமிகு கலை நிகழ்ச் சிகள் நடத்தப்படவுள்ளது. இதே போல், இளைஞர்களுக்கான கால் பந்து, கைப்பந்து, கிரிக்கெட், கபாடி, கயறு இழுத்தல், மாரத்தான் உள் ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. இந்த கோடை விழா மற்றும் மலர்க்காட்சி மே 25 ஆம் தேதி துவங்கி ஜீன் 1 ஆம் தேதி வரை 8 நாள்கள் நடைபெறவுள்ளது. முன்னதாக, இதன் துவக்க நிகழ்வில் சேலம் மாவட்ட ஆட்சி யர் செ.கார்மேகம் , கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மருத் துவர். பொன். கௌதம் சிகாமணி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் உள்ளிட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப் பினர்கள், உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.