உரிமையியல் நீதிபதி பதவிக்கான எழுத்து தேர்வு: நீதிபதி ஆய்வு
சேலம், ஆக.20- சேலத்தில் நடைபெற்ற உரிமையியல் நீதிபதி பதவிக்கான எழுத்து தேர்வை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உரிமையியல் நீதிபதி பதவியில் காலியாக உள்ள 245 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டது. இந்நிலையில், உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதல் நிலை தேர்வு சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி உட்பட 9 மாவட்டங்களில் சனியன்று நடைபெற்றது. அதன் படி சேலம், கொண்டலாம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்ட மையத்தில் இந்த தேர்வு நடை பெற்றது. இம்மையத்தில் தேர்வை எழுத 858 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் 807 பேர் கலந்து கொண்டு ஆர்வமுடன் எழுதினர். 51 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதற்கிடையே தேர்வு மையத்துக்கு மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண் டனர். தேர்வையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சேலம், ஆக.20- இதமான காற்றை அனுபவிக்க ஞாயிறன்று சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுவது ஏற்காடு. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங் களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில், ஏற்காட்டில் சீதோசன நிலை மிகவும் குளுமையாக காணப்படுகிறது. வெயிலின் தாக்கமின்றி இதமான காற்று வீசுகிறது. இதனை அனுபவிக்க ஏராள மான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் ஞாயிறன்று குவிந்தனர். இங்குள்ள முக்கிய சுற்றுலா இடங்களான அண்ணா பூங்கா, ஏரிபூங்கா, லேடிசீட், பக்கோடா பாயின்ட், ரோஜா தோட்டம், சேர்வராயன் குகை கோயில், பொட்டானிக்கல் கார்டன், ஐந்தினை பூங்கா போன்ற இடங்களில் குடும் பத்துடன் கண்டு ரசித்தனர். பூங்காகளில் குழந்தைகள் விளை யாடி மகிழ்ந்தனர். மேலும், சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய ஏற்காடு படகு இல்லத்தில் குவிந்துள்ளனர். இதில் மிதி படகு, மோட் டார் படகு, துடுப்பு படகில் சென்ற இயற்கை காட்சிகளை ரசித்தனர். இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதி களவில் வருவதால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இலவச தையல் இயந்திரம் பெற ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்கவும்
ஈரோடு, ஆக.20- இலவச தையல் இயந்திரம் பெற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப் பங்கள் நேரடியாக பெறப்பட்டு வந்தது. அத்திட்டத்தின் கீழ் விண்ணப்பம் பெறுவது கணினி மயமாக்கப்படுகிறது. எனவே, வரும் 1ஆம் தேதிக்குப் பின்னர் இலவச தையல் இயந்திரம் வேண்டி இணையத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இலவச தையல் இயந்திரம் பெறு வதற்கு வயது சான்று (21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்), ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், அங்கீக ரிக்கப்பட்ட நிறுவனத்தில் தையல் பயிற்சி பெற்றதற்கான சான்று, வருமானச்சான்று (ரூ.72ஆயிரத்திற்கு மிகாமல்), வட்டாட்சியரால் வழங்கப்பட்ட விதவை, கணவனால் கைவி டப்பட்டதற்கான சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 மற்றும் அசல் சான்றுகளுடன் இ - சேவை மையத்தில் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், ஒப்புகை சீட்டுடன் அதன் நகல்களை சம்பந்தப் பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 0424-2261405 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம்
திருப்பூர், ஆக.20- தேங்காய் விலை வீழ்ச்சியை கண்டித்து குண்டடத்தில் விவசாயிகள் தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞரணி சார்பில் குண்டடம் பேருந்து நிறுத்தம் அருகே தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க வேண்டும். எந்தவித நிபந்தனை இன்றி விவசாயிகளிடம் கொப்பரை தேங்காயை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். சத்துணவு திட்டத்தில் தேங்காய்பால், தேங்காய் எண்ணெய் சேர்க்கக் கோரியும், அனைத்து ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
மயான இடத்தை அபகரிக்கும் முயற்சியை தடுக்க மலைவாழ் மக்கள் கோரிக்கை
தருமபுரி, ஆக.20- மலைவாழ் மக்களுக்கு வழங்கப்பட்ட மயான இடத்தை அபகரிக்கும் முயற்சியை தடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திதற்கு மலை வாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட ஆலமரத்துப்பட்டி கிரா மத்தில் 100க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பங்கள் வசிக்கின்றனர். இம்மக்கள் மயான வசதி கேட்டு வருவாய்த்துறையிடம் முறையிட்டனர். இதையடுத்து, பட்டுக் கோணம்பட்டி (சர்வே எண் 125/2) நீர்வரத்து இல்லாத வறண்ட பயனற்ற குட்டையை வகை மாற்றம் செய்து ஒருபகுதியை சமன் செய்து மயானம் அமைத்துக் கொடுத்தனர். இந்த மயானத்தில் இறந்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இம்மயானத்தின் அருகில் உள்ள நில உரிமையாளர், அரசு குட்டையை அபகரிக்க வேண்டுமென்ற நோக்கில் பல புகார் மனுக் களை அதிகாரிகளுக்கு அனுப்பி வரு கிறார். எனவே, ஆலாமரத்தூர் கிராம மலை வாழ் மக்களின் நலன் கருதி அமைக்கப் பட்ட மயானத்திற்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நிதி ஒதுக்கீடு செய்து சுற்றுச் சுவர் அமைத்து தரவேண்டும். குட்டையை அபகரிக்கும் நில உரிமையாளர் முயற்சியை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வனப்பகுதிகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு
உதகை, ஆக.20- மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதி வரை வனப் பகுதிகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், “நீலகிரி நில அமைப்பு” குறித்த மூன்று நாள் கருத் தரங்கம் நடைபெற்றது. இதன்ஒருபகுதியாக 2 ஆம் நாள் கருத்தரங்கம் சனியன்று நடைபெற்றது. இதில், தமிழக தக வல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப் போது அவர் பேசுகையில், உதகையின் மந்தமான வளர்ச்சி வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனை மாற்றும் வகையில், அனைவரும் வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும். இதற்கு வெவ்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் ஒன்று சேர வேண்டும். அதற்கு இதுபோன்ற கருத்தரங்குகள் மிகவும் அவசியம். கடந்த 2 ஆண்டுகளில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கிழக்கு தொடர்ச்சி மலைகள் வரை வனப்பகுதி விரிவுபடுத் தப்பட்டுள்ளது. இதற்கான பயன்களை ‘டிஜிட்டல்’ வரைபடம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. நீலகிரியில் உள்ள பழங்குடி யினர் விடுதிகள் மற்றும் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நான் நிதி அமைச்சராக இருந்தபோது, நில குத்தகை புதுப் பித்தல் பணிகள் முழுவதும் நிறுத்தப்பட்டது. அனைத்து நிலங் கள் மற்றும் குத்தகைகளையும் கணக்கெடுக்க நடவடிக்கை எடுத்தேன். வனப்பகுதிகளை ஒட்டிய நிலங்களை மீண்டும் காடுகளாக மாற்ற வேண்டும். அப்போது தான் மலை பகுதி களின் சுற்றுச்சூழல் மேம்படும். உயிர்ச்சூழல் மண்டலம் பாது காக்கப்படும், என்றார்.
கொடிய விஷமுடைய கருநாகம் மீட்பு
கொடிய விஷமுடைய கருநாகம் மீட்பு நாமக்கல், ஆக.20- ராசிபுரம் அருகே புறாக்கூண்டிற்குள் புகுந்த கொடிய விஷ முடை 6 அடி நீள கருநாகத்தை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி மீட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள கோனேரிப் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் வீட்டிலேயே கூண் டுகள் அமைத்து புறாக்கள் வளர்த்து வருகிறார். இந்நிலை யில், கடந்த 10 நாட்களாகவே புறாக்கள் ஒவ்வொன்றாக மாய மானதாக கூறப்படுகிறது. மேலும், சில புறாக்கள் கூண்டின் உள் ளேயே இறந்து கிடந்த நிலையில், ஞாயிறன்று திடீரென புறாக் கள் அதிகளவு சத்தம் போட்டுள்ளன. இதைக்கேட்ட ரமேஷ் சென்று பார்த்தபோது, ஒரு புறாவை பாம்பு ஒன்று விளங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ந்து போன அவர். ராசிபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம் பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினர் நீண்ட நேரம் போராடி, கொடிய விஷமுடைய 6 அடி நீள கருநாக பாம்பை பிடித்து வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.
கோவையில் குழந்தை தொழிலாளர் மீட்பு
கோவை, ஆக.19- கோவையில் வணிக வளாகங்கள், கடை களில் சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்பட் டுள்ளனரா? என்பதனை கண்காணித்து அதி காரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கோவை வெரைட்டிஹால் சாலை, எம்என்ஜி தெருவில் உள்ள ஒரு நகைப்பட்டறையில் சிறுவன் பணிக்கு அமர்த் தப்பட்டுள்ளதாக, குழந்தைகள் நல திட்ட அதி காரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், அதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தினர். அதில், சிறுவன் அங்கு பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இத னையடுத்து நகைப்பட்டறையில் வேலை பார்த்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த 15 வயது சிறுவனை அதிகாரிகள் மீட்டனர். இது குறித்து வெரைட்டிஹால் காவல் நிலையத் தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தில் நகைப்பட்டறை உரிமையாளர் பிபாஸ் குசைத் (35) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்
உதகை, ஆக.20- உதகையில் உள்ள ஏடிசி முதல் என்டிசி பகுதி வரையில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. உதகை நகரின் முக்கிய சாலைகளில் ஒன்று எட்டினஸ் சாலை. மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமான அரசு பேருந்துகள் இவ்வழித்தடத்தில் ஏடிசி வழியாக இயக்கப் படுகிறது. அதேபோல், வெளியூர் மற்றும் கிராமப்புறங்க ளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இவ்வழித்தடத்தி லேயே செல்ல வேண்டும். மேலும், பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வரு கின்றனர். இச்சாலை மிகவும் குறுகியே உள்ள நிலையில், இந்த சாலையோரங்களில் சிலர் தங்களது வாகனங்களை காலை முதல் மாலை வரை நிறுத்திக் கொள்கின்றனர். சில சம யங்களில் லாரிகளையும் நிறுத்திக் கொள்கின்றனர். சிலர் பொருட்களை வாங்க கடைகளின் முன்புறம் நிறுத்தி செல் கின்றனர். அப்போது இந்த வாகனங்களை கடந்து செல்ல முற்படும் வாகன ஓட்டிகள், எதிரே வரும் வாகனங்கள் மீது மோதியோ அல்லது உரசியோ விபத்துகள் ஏற்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நின்று விடுகின்றன. குறிப்பாக, தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறையின் போது அதிகளவு சுற்றுலா பயணிகள் உதகை வரும் நிலை யில், இச்சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கின்றனர். எனவே, இச் சாலையில் வாகனங்களை நிறுத்தமால் இருக்க காவல்துறை யினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலை யோரத்தில் உள்ள கால்வாயை சீரமைத்து அதன் மீது கான் கிரீட் தளம் அமைத்து சாலையை விரிவாக்க வேண்டும் என வும் கோரிக்கை எழுந்துள்ளது.
சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் பலி
சூலூர், ஆக.20- சூலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதில் இரு கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை மாவட்டம், சூலூரை அடுத்துள்ள பாரதிபுரத் தைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீ சக்தி மற்றும் கண்ணன். நண்பர்களான இருவரும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தனர். இந்நிலையில், இருவரும் தங்கள் குடும்பத்தினரு டன் திருச்சி சாலையில் உள்ள தனியார் திரையரங்கில் ஜெயி லர் திரைப்படம் பார்த்துவிட்டு, வீடு திரும்பியுள்ளனர். அப் போது கண்ணன் மற்றும் ஸ்ரீசக்தி ஆகிய இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். கண்ணன் வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. சிந்தாமணி புதூர் அருகே கொச்சின் நெடுஞ்சாலை சிக்னலை கடந்த போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறம் இருந்த தனியார் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் மீது அதிவேகமாக மோதியது. இதில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற் பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சூலூர் போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோத னைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளை மின்தடை
நாமக்கல், ஆக.20- நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் துணை மின் நிலையத்தில் செவ்வா யன்று (நாளை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. இதனால் பர மத்தி வேலூர், நல்லியாம் பாளையம், பொத்தனூர், வி. சூரியாம்பாளையம், வீராணம் பாளையம், கோப்பணம்பா ளையம், குப்பிச்சிபாளை யம், ஜேடர்பாளையம், வட கரையாத்தூர், காளிபாளை யம், கரைப்பாளையம், கண் டிப்பாளையம், கருக்கம்பள் ளம் ஆகிய பகுதிகளில் செவ் வாயன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநி யோகம் இருக்காது.