சென்னை, டிச.6 - தனது ‘தேசாந்திரி’பதிப்பகத்தின் குடோனுக்குள் வெள்ள நீர் புகுந்த தால் ரூ.20 லட்சம் மதிப்புள்ள புத்த கங்கள் சேதமானது என்று எழுத்தா ளர் எஸ்.ராமகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது பேஸ்புக் பதிவில், “புத்தகங்களை இழந்தோம். கடும் புயல் மழையால் எங்கள் பதிப் பகத்தின் குடோனுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. காலை ஐந்து மணி முதல் புத்தகங்கள் வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டோம். கடும் மழையின் காரணமாக வாக னம் எதுவும் கிடைக்கவில்லை. தண் ணீர் சரசரவென உயர்ந்து கொண்டே போனது. புத்தகங்கள் இடம் மாற்ற இயலவில்லை. ஏராளமான புத்த கங்கள் நனைந்து வீணாகிப்போகின. கண்ணீரோடு அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.