districts

நீண்ட கால விவசாய கடனை தள்ளுபடி செய்க

தருமபுரி, ஜூலை 26- நீண்டகால விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என  குறைகேட்பு கூட்டத்தில் விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயி கள் குறைகேட்புக் கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கரும்பு கொள் முதல் விலையை அதிகரிக்க வேண்டும். நடவு கரும்பை மானி யத்தில் வழங்க வேண்டும். கரும்பு  வெட்டும் இயந்திரத்தை கூடுதலாக  கொள்முதல் செய்ய வேண்டும். கரும்பு சாகுபடி பரப்பளவை அதிக ரிக்க அரசு உரிய சலுகைத் திட் டங்கள் அறிவிக்க வேண்டும். கூட் டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற மத்திய கால, நீண்ட கால  கடன்களை தள்ளுபடி செய்ய  வேண்டும் அல்லது குறைந்தபட்சம்  வட்டி, அபராத வட்டியை தள்ளு படி செய்ய வேண்டும். தருமபுரி  மாவட்ட நியாயவிலைக்கடை களில் விநியோகிக்க கேழ்வரகு, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன் கனிக்கோட்டை, பெங்களூரு ஆகிய இடங்களில் கொள்முதல் செய்வதை தவிர்த்து, தருமபுரி மாவட்டத்தில், விளையும் கேழ் வரகை கொள்முதல் செய்ய வேண்டும். ஒகேனக்கல் மிகை நீர்த் திட்டம், ஈச்சம்பாடி நீரேற்றும் திட்டம் உள்ளிட்ட நீர்ப்பாசனத் திட் டங்கள் நிறைவேற்ற வேண்டும் என  விவசாயிகள் தெரிவித்தனர். தருமபுரி ஆவின் பாலகங் களில், பால் உற்பத்திப் பொருள் கள் தரமானதாக விற்பனை செய்ய  வேண்டும். ஆவின் சங்கங்களில் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு நிலுவையின்றி பணம் வழங்க வேண்டும்.  இதேபோல, தரமான தீவனம்  வழங்க வேண்டும். மாவட்டத் திலுள்ள ஆவின் பாலகங்களில் உள்ள சுகாதார சீர்கேடுகளை களைய வேண்டும். பஞ்சப்பள்ளி அணையின் உயரத்தை அதிக ரிக்க வேண்டும் என விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தி பேசினர். அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குநர் பிரியா, வேளாண் இணை இயக் குநர் க.விஜயா, கால்நடை பராம ரிப்புத்துறை இயக்குநர் சாமி நாதன், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் சக்தி மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.