பொள்ளாச்சி, ஜூலை 30- பொள்ளாச்சி நான்குமுனை சுங்கத்தில் உலக புலிகள் தினத் தையொட்டி வனத்துறை சார் பில் விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. உலக புலிகள் தினம் (ஜூலை 29) உலகம் முழுவதும் கொண் டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம், பொள் ளாச்சி அருகே உள்ள நான்கு முனை சுங்கம் பகுதியில் பொள்ளாச்சி வனச்சரகத்தின் வனத் துறை சார்பில் கொண்டாடப்பட்டது. ஆனை மலை புலிகள் காப்பகம் வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்படி பொள்ளாச்சி துணை இயக்கு னர் கணேசன் தலைமையில் உலக புலிகள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாண வர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடை பெற்றது. நமது நாட்டின் தேசிய விலங்கான புலி களைப் பாதுகாப்பதன் அவசியம் மற்றும் வனபகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆழியார் வரை பேரணி நடைபெற்றது. முன்னதாக இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் நடை பெற்ற பேரணியில், கோவை தனியார் கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவர்கள் வனச்சரகர்கள் மணிகண்டன், வெங்கடேஷ் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்ட னர். இதில் கலந்துகொண்ட மாணவ மாணவி யர்கள் புலி வேடம் போட்டு பேரணியில் பங் கேற்றனர். வனத்துறையினர் தங்களது முகத் தில் புலியின் தோட்டம் பொருந்திய டாட்டூ முகத்தில் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத் தினர்.