கோவை, ஜன.8- தமிழ்நாடு சிறு தானிய மாநாடு - 2023 கண்காட்சி மற் றும் கருத்தரங்கு நிகழ்ச்சி யினை, உணவு மற்றும் உண வுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்து பார்வை யிட்டார். கோவை மாவட்டம், நிர் மலா மகளிர் கல்லூரியில் சனி யன்று நடைபெற்ற தமிழ்நாடு சிறு தானிய மாநாடு - 2023 கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி யினை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 100 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டி ருந்தன. மேலும், சிறுதானியங்களை கொண்டு 555 வகையான உணவு பொருட் கள் தயாரிக்கப்பட்டு, காட்சிபடுத்தியது உலக சாதனையாக கருதப்பட்டது. அதற்கான அறி விப்பை உலக சாதனைகள் யூனியன் (புளோ ரியா - USA) அதிகாரப்பூர்வ பதிவு மேலா ளர் கிறிஸ்டோபர் டெய்லர் வெளியிட்டார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், ஆரோக்கிய ஹெல்த் கேர் மற்றும் திட்டக்குழு உறுப்பினர் ஜி.சிவ ராமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக், நிர்மலா கல்வி குழும தலைவர் பேபியோலா மேரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.