districts

img

உலக தாய்மொழி நாள் சிறப்பு கருத்தரங்கம்

ஈரோடு, பிப்.22- உலக தாய்மொழி நாள் சிறப்பு கருத்தரங் கம், ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் ஈரோடு வேளா ளர் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சார் பில் உலக தாய்மொழி நாள் சிறப்பு  கருத்தரங் கம், திங்களன்று ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியின்  கஸ்தூரிபா கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வேளாளர் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். தமிழ்த் துறைத் தலைவர் பேரா.நிர்மலாதேவி வர வேற்புரையாற்றினார். தமிழ்த்துறைப் பேரா சிரியர் சுமதி அறிமுகவுரையாற்றினார். தமு எகச மாநில பொதுச்செயலாளர் எழுத்தா ளர் ஆதவன் தீட்சண்யா சிறப்புரையாற்றி னார்.  நிறைவாக, தமுஎகச ஈரோடு மாவட்ட  செயலாளர் சங்கரன் நன்றி கூறினார். இந் நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாண விகள், பேராசிரியர்கள் கலந்து கொண்ட னர்.