தார்ச்சாலை கோரி ஆட்சியரிடம் மனு
தருமபுரி, ஜன.7- இலக்கியம்பட்டி அருகே தார்ச்சாலை அமைக்க வேண் டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி ஊராட்சி, வெண் ணாம்பட்டி கே.சி.கே. நகர் பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்னர். இப்பகுதியில் தார்ச் சாலை அமைக்கப்படாமல் மண் சாலையாக உள்ளது. இத னால் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறி இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்ற னர். எனவே, தங்கள் பகுதிக்கு தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி பொது மக்கள் மனு அளித்தனர். இதுகுறித்து தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யா கூறுகையில், வெண்ணாம்பட்டி, கே.சி.கே. நகர் பொதுமக்கள் தார்ச்சாலை அமைக்க வேண் டும் என மனு அளித்துள்ளனர். இப்பகுதியில் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் சிமெண்ட் சாலை அமைக்க மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு சேலத்தில் நேரடி ஒளிபரப்பு
சேலம், ஜன.7- சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 சென்னையில் நடைபெற்று வருவதை சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், ஆட்சியர் உட்பட 100க்கும் மேற்பட்ட முதலீட் டாளர்கள் கலந்து கொண்டனர். பன்னாட்டு உற்பத்தி நிறுவனங்கள், தொழில்நுட்ப ஜாம்ப வான்கள், தொழில்முனைவோர், தொழில் நிறுவனங்கள் என தமிழ்நாட்டின் வணிகத்தளம் சிறந்து விளங்குகிறது. தமிழ் நாட்டில் முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளைப் பெருக் கிடும் வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 சென் னையில் ஜன.7,8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அந்த வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 சென்னை யில் நடைபெற்று வருவதை ஞாயிறன்று சேலம் மாவட்ட ஆட் சியரகத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் 100க்கும் மேற்பட்ட முதலீட் டாளர்கள் கலந்து கொண்டு, பார்வையிட்டனர். மேலும், சமூக ஊடகங்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூர் தொலைக்காட்சிகள், மாநகராட்சிப் பகுதிகளில் அமைக்கப் பட்டுள்ள மின்னணு திரைகள் மற்றும் செய்தி மக்கள் தொடர் புத் துறையின் அதிநவீன வீடியோ மின்னணு வாகனம் உள் ளிட்டவைகள் மூலம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
10.71 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு: சேலம் ஆட்சியர் தகவல்
சேலம், ஜன.7- சேலம் மாவட்டத்தில் மொத்தம் 10,71,905 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து சேலம் ஆட்சியர் செ.கார் மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது, தமிழர் திருநாள் தைப்பொங் கல் விழாவை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப் பாக தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்புடன் ரூ.1,000 ரொக்கமும் வழங்க தமிழக அரசு ஆணையிட் டுள்ளது. அதன்பேரில், சேலம் மாவட்டத்தில் 10,70,970 அரிசி பெறும் குடும்ப அட்டைகளுக் கும் மற்றும் 935 இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்க ளுக்கும் என மொத்தம் 10,71,905 குடும்பங்க ளுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு ஜன.10 ஆம் தேதியன்று முதல் வழங்கப்பட உள்ளது. நியாயவிலைக் கடைகளில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் குடும்ப அட் டைதாரர்கள் வருகை தருவதைத் தவிர்க்க முன்னதாகவே டோக்கன்கள் வழங்கப்பட்டு நாளொன்றுக்கு 200 முதல் 250 குடும்ப அட் டைதாரர்கள் வீதம் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் வழங்க ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் ஒருவர் வந்தால் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங் கப்படும். முதியோர்கள், கர்ப்பிணி பெண் கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன் னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தில் புகார் களைத் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் அறை எண்.130ல் கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டுள்ளது. புகார்களை கட்ட ணமில்லா தொலைபேசி எண்.1967, 1800-425-5901 மற்றும் தொலைபேசி எண்.0427 – 2451913 ஆகியவற்றில் தெரிவிக்கலாம், என அதில் கூறப்பட்டுள்ளது.
வரதட்சணை கொடுமை: கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு
தருமபுரி, ஜன.7- நல்லம்பள்ளி அருகே வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவர் உட்பட 5 பேர் மீது தருமபுரி மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள கொல்லகொட்டாய் கிரா மத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி கௌசல்யா (24). இவர்க ளுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. அப்போது கௌசல்யா வின் பெற்றோர் வரதட்சணையாக 28 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள வீட்டு பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளனர். இந்நிலையில், திரு மணத்திற்கு பிறகு கார்த்திக்கின் பெற் றோர் முனியம்மாள், சின்னசாமி, தங்கை திவ்யா ஆகியோர் ரூ.10 லட் சம் பணம், கார் எப்போது வாங்கி தரு வீர்கள்? என கேட்டு அடிக்கடி கௌசல் யாவை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கௌசல்யா, வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்வதாக கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீ சார், கார்த்திக் மற்றும் அவரது பெற் றோர் சின்னசாமி, முனியம்மாள், தங்கை திவ்யா, தரகர் மாரியப்பன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒருங்கிணைந்த பொறியியல் பணித்தேர்வு: தருமபுரியில் 1,897 பேர் எழுதினர்
தருமபுரி, ஜன.7- டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த ஒருங்கி ணைந்த பொறியியல் பணிகளுக்கான போட்டித்தேர்வு தமிழ் நாடு முழுவதும் சனியன்று நடைபெற்றது. தருமபுரி மாவட் டத்தில் தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரி, தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இலக்கியம் பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 4 மையங்களில் இத் தேர்வு நடைபெற்றது. இதில் முற்பகல் நடைபெற்ற தேர்வுக்கு 1,382 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 926 பேர் தேர்வில் பங்கேற்றனர். 456 பேர் பங்கேற்கவில்லை. அதேபோல, பிற்பகல் நடைபெற்ற தேர்வுக்கு 1,435 பேர் விண்ணப்பித்தி ருந்தனர். அவர்களில் 971 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங் கேற்றனர். 464 பேர் பங்கேற்கவில்லை. தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரி தேர்வு மையத்தில் நடைபெற்ற தேர்வை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பார்வையிட்டார்.
ரூ.55 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
சேலம், ஜன.7- சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த கொங்கணா புரத்தில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியா ளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சனியன்று பருத்தி ஏலம் நடைபெற்றது. 2,300 மூட்டை பருத்தியை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்தனர். பிடி ரகம் ஒரு குவின்டால் ரூ.6,069 முதல் ரூ.7,319 வரையும், கொட்டு ரகம் ரூ.3,169 முதல் ரூ.4,809 வரையும் ஏலம் போனது. மொத்தம் 2300 மூட்டை பருத்தி, ரூ.55 லட்சத்திற்கு ஏலம் போனதாக ஏல அதிகாரி கள் தெரிவித்தனர்.
உணவில் புழு: அதிகாரிகள் ஆய்வு
சேலம், ஜன.7- சேலம் அத்வைத ஆசிரமம் சாலையில் உள்ள உணவகத்தின் சாம்பார் சாதத்தில் புழுக்கள் கிடந்ததால் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையிட்டு உணவ கத்தை மூடினர். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அத்வைத ஆசிரமம் சாலையில் தனி யார் உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் சாம் பார் சாதம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டி ருந்தார். அப்போது சாதத்தில் புழுக்கள் கிடந்தன. உடனே உணவக உரிமையாளரி டம் அவர் தெரிவித்துள்ளார். அதற்கு உரி மையாளர் முறையாக பதில் சொல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இத னால் அந்த வாடிக்கையாளர், சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியை தொடர்புகொண்டு புகாரளித்தார். அதன் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் உத்தரவில், உணவு பாது காப்பு ஆய்வாளர் சுருளிராஜன் தலைமை யிலான குழுவினர் அந்த உணவகத்திற்கு சென்று உணவுகளை ஆய்வு செய்தனர். அதில் சாம்பார் சாதத்தில், புழுக்கள் இருப் பது உறுதியானது. இதையடுத்து உணவ கத்திலிருந்த உணவுகளை அப்புறப்படுத்தி னர். தொடர்ந்து பூச்சிகள் வராதவகையில் தடுப்பு நடவடிக்கை எடுத்துவிட்டு, எங்க ளுக்கு தகவலளித்து நாங்கள் வந்து ஆய்வு செய்த பிறகே உணவகத்தை திறக்க வேண் டும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கள் உத்தரவிட்டனர்.
காட்டுயானை தாக்கி தொழிலாளி பலி
தருமபுரி, ஜன.7- அரூர் அருகே காட்டிற்குள் துடைப்பம் செய்ய புல் அறுக்க சென்ற தொழிலாளி, காட்டுயானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள தொட்டியூரை சேர்ந்தவர் ருத் ரப்பா (61). இவர் வனப்பகுதியில் புல் சேக ரித்து துடைப்பம் செய்து விற்பனை செய்து வந்தார். இவருடன் அதே கிராமத்தை சேர்ந் தவர்களும் துடைப்பம் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ருத்தரப்பா அவரது மனைவி மற்றும் சிலருடன் துடைப் பம் தயாரிப்பதற்க்காக புல்சேகரிக்க மொரப் பூர் காப்புகாட்டு வனப்பகுதிக்கு சென்றுள்ள னர். கோரைமடுவு பகுதியில் புற்கள் சேக ரித்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒற்றை யானை ருத்தரப்பாவை துரத்தி, காலால் போட்டு மிதித்தது. இதில் அவர் சம் பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கி ருந்து தப்பித்த சிலர் அருகிலிருந்த கிராம பொதுமக்களிடம் இதுகுறித்து தெரிவித் துள்ளனர். இதன்பிறகு வனத்துறை மற்றும் போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர், ருத்ரப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, ஒற்றை யானை வனப்பகுதியில் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் வனத்திற் குள் செல்வதை தவிர்க்குமாறு வனத்துறை யினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கூடுதல் கட்டணம் வசூலித்த வங்கிக்கு ரூ.13 ஆயிரம் அபராதம்
திருப்பூர், ஜன.7- உடுமலை அருகே நகை அடமானத்துக்குக் கூடுதல் கட்ட ணம் வசூலித்த பொதுத் துறை வங்கிக்கு ரூ.13 ஆயிரம் அபரா தம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த பாலப்பம்பட் டியைச் சோ்ந்தவர் குணசேகரன், இவரின் மனைவி பவித்ரா. இவர், அதே பகுதியில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந் தியா வங்கியில் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி நகையை அடமானம் வைத்து ரூ.96 ஆயிரம் கடன் பெற்றிருந் தார். இதைத்தொடர்ந்து, சில மாதங்களுக்குப் பின்னர் நகைக் கடனுக்கான அசல், வட்டியை செலுத்தி நகையை மீட்டுள் ளார். அப்போது, பவித்ராவின் சேமிப்புக் கணக்கில் இருந்து தனியாக ரூ.1,500 வங்கி நிர்வாகம் சாா்பில் எடுக்கப்பட்டுள் ளது. பின்னர், அவர் நகைக்கடன் தொடர்பான வங்கியின் வரவு செலவு கணக்கைப் பார்த்தபோது கூடுதலாக ரூ.1,500 எடுக்கப் பட்டிருந்தது தெரியவந்து. இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை. இதனால், திருப்பூர் நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசா ரித்த நுகர்வோர் நீதிமன்றத்தின் தலைவர் எஸ்.தீபா, உறுப்பி னர்கள் எஸ்.பாஸ்கர், வி.ராஜேந்திரன் ஆகியோர் சனிக்கி ழமை தீா்ப்பு வழங்கினர். இதில், கூடுதலாகப் பெற்ற ரூ.1,500, வழக்கு செலவுத் தொகை ரூ.3 ஆயிரம், மன உளைச்சலை ஏற்படுத்தியதற் காக ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பவித்ராவுக்கு வழங்க உத் தரவிடப்பட்டது.
ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்
திருப்பூர், ஜன.7- திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படையில் சேர தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படையில் சேர 10 ஆம் வகுப்பு படித்த 20 முதல் 45 வயதுக்குள்பட்ட ஆண்கள், பெண்கள் விண்ணப் பிக்கலாம். திருப்பூர் மாநகரில் வசிப்பவராக இருக்க வேண் டும். நல்ல உடல் தகுதியுடன், நன்னடத்தை உடையவராக வும், எந்த ஒரு அரசியல் அமைப்பைச் சேராதவராகவும் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை திருப்பூர் வடக்கு காவல் நிலையம் பின்புறம் உள்ள ஊா்க்காவல் படை அலுவலகத் தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் பெற்றுக்கொள் ளலாம். இதன் பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களை ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வரும் ஜனவரி 20 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
இன்று மின்தடை
திருப்பூர், ஜன.7- வடுகபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராம ரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திங்கட்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறி யாளர் தெரிவித்துள்ளார். மின்தடை ஏற்படும் பகுதிகள்: வடுகபட்டி, குமாரபாளை யம், மூக்குதரித்தான்பாளையம், சுள்ளபெருக்காபாளையம், சம்மங்கரை, வண்ணாபட்டி, பட்டுத்துறை, வரப்பட்டி, நீலாங் காளிவலசு மற்றும் பி.ராமபட்டணம்.
வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
திருப்பூர், ஜன.7- திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் சார்பில் ஆரம்ப கட்ட பணிகள் துவங்கி யுள்ளன. அதன் ஒருபகுதியாக, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பில், வாக்காளர் விழிப்புணர்வு குறித்த சைக்கிள் பேரணி ஞாயிறன்று நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி அலு வலகத்திலிருந்து துவங்கிய இந்த சைக்கிள் பேரணியை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும், தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன்குமார் கிரி யப்பவனவர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மாநக ராட்சி அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணியானது ரயில் நிலையம், 60 அடி சாலை, புஷ்பா ஜங்சன் வழியாக மீண்டும் மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. வாக்களிப்ப தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய வாறு இந்த பேரணி நடைபெற்றது.
மருத்துவமனைக்கு இடையூறு: விளம்பர பதாகைகள் அகற்றம்
உடுமலை, ஜன.7- மடத்துக்குளம் அரசு தலைமை மருத்துவமனை அருகில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் பேரூராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டது. உடுமலை பொள்ளாச்சி தேசிய நெடுச்சாலையில் கொழு மம் மற்றும் தாராபுரம் செல்லும் சாலைகள் சந்திக்கும் நால் ரோட்டில் போக்குவரத்து நெரிசலான இடத்தில் மடத்துக்கு ளம் தாலூகா தலைமை மருத்துவமனை உள்ளது. இப்பகுதி யில் தொடர் விபத்துகள் ஏற்படும் வளைவு பகுதிகளில் வைத் துள்ள விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும் எனவும், மருத்துவமனை கதவின் முன் இருக்கும் ஆக்கிரமிப்புகளால் ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாமல் இருப்பதை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பொது இடத்தில் இருந்த ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டது. மேலும் இது குறித்து பொது மக்கள் தெரிவிக்கையில், மடத்துக்குளம் நால் ரோடு பகுதியை அக லப்படுத்தி மருத்துவமனைக்கு என்று தனியாக பாதை அமைக்க வேண்டும். போக்குவரத்தை சரி செய்யும் வகையில் தானியங்கி சிக்னல்களை காவல்துறை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மனைவியை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை
கோபி, ஜன.7- கோபி அருகே மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்து விட்டு, கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி அம்மன்கோவில் தோட்டம் பகுதி யைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். வழக்கறிஞரான இவர், அய்யம் பாளையம் பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவருக்கு கனிமொழி என்ற மனைவியும் கார்த்தி என்ற மகனும் உள்ளனர். கார்த்தி விமானப்படை தளத்தில் பணி யாற்றி வருகிறார். இந்நிலையில், ஞாயிறன்று ஈஸ்வரனின் வீட்டுக்கதவு வெகுநேரமாக திறக்கப்படாமல் இருப்பதை கண்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது, வழக்கறிஞர் ஈஸ்வரன் தூக்கு கயிறில் தொங்கியபடியும், மனைவி ரத்த வெள்ளத்திலும் இறந்து கிடந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, சம்பவம் தொடர் பாக கவுந்தப்பாடி காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப் பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக் காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசார ணையில், ஈஸ்வரனுக்கு கடன் பிரச்சனை இருந்ததால், மனைவி கனிமொழியை சுத்தியலால் அடித்து கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை கொண்டது தெரிய வந்தது. மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கவுந்தப் பாடி பகுதியில் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.
நிதி நிறுவன கதவை உடைத்து பணம் திருட்டு
ஈரோடு, ஜன.7- ஈரோடு பெரியசேமூர், ராசாம்பாளையம் சாலை, தென்றல் நகர் 6-ஆவது வீதியை சேர்ந்தவர் ஐயப்பன் (56). இவர் ஈரோடு நேதாஜி நகர் திருவிக வீதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். வெள்ளியன்று மதியம் அலுவலக கதவைப் பூட்டி விட்டு, சாப்பிடுவதற்காக வீட்டுக்குச் சென்றார். பின்னர் மாலை திரும்பி வந்து பார்த்தபோது, அலுவலக கதவு உடைக்கப்பட்டு மேஜை டிராவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஈரோடு வடக்கு காவல்நிலையத்தில் ஐயப்பன் புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பகுதிகளில் பொருத்தப்பட் டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி சம்பந்தப் பட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
அரசாணைப்படி இழப்பீட்டுத் தொகை வழங்குக
ஈரோடு, ஜன7- உயர்மின் கோபுர மின்பாதை பணிக் காக வெட்டப்பட்ட தென்னை மரங்களுக்கு அரசாணைப்படி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்கத்தினர், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா விடம் அளித்த மனுவில் கூறயிருப்பதாவது, கடந்த 2018-ஆம் ஆண்டு உயர்மின் கோபு ரங்கள் அமைக்க பவர்கிரிட் நிறுவனம் மூலம் மொடக்குறிச்சி வட்டத்தில் மின்பாதை அமைக்கப்பட்டது. அப்போது 13 ஆயிரத்து 242 தென்னை மரங்கள் வெட்டப்பட்டன. அதற்கு இழப்பீடாக ஒரு மரத்துக்கு ரூ.32 ஆயிரத்து 240 மட்டும் வழங்கப்பட்டது. ஆனால் அரசாணைப்படி ஒரு மரத்துக்கு ரூ.36 ஆயிரத்து 450 வழங்கப்பட்டிருக்க வேண்டும். மீதமுள்ள ரூ.4,210-ஐ வழங் கக் கோரி பல முறை அரசிடம் வலியுறுத் தப்பட்டது. மேலும் பவர்கிரிட் நிறுவனத் துக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. பிற மாவட்டங்களிலும், ஈரோடு மாவட் டத்தின் பிற பகுதிகளிலும் அரசாணைப்படி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில், மொடக்குறிச்சி வட்டத்துக்கு உள்பட்ட விவசாயிகளுக்கு மட்டும் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. எனவே உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க அரசு உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பென்னாகரம் அரசு மருத்துவமனையில் மருத்துவத்துறை கூடுதல் இயக்குநர் ஆய்வு
பென்னாகரம், ஜன.7- பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை யில் மருத்துவத்துறை கூடுதல் இயக்குநர் விஸ்வநாதன் ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு நாள்தோறும் பென்னாகரம், தாசப்பட்டி, பருவதன அள்ளி, மாங்கரை, சின்னம்பள்ளி, ஒகேனக்கல், முதுகம்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து உள்நோயாளிகள், புற நோயாளிகள் என சுமார் ஆயிரத் துக்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு, குழந்தை கள் பிரிவு, ஆய்வகம், சமையல் அறை, அதிநவீன சிகிச்சைப் பிரிவு, ரத்தப் பரிசோதனை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுக ளில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கூடுதல் இயக்கு நர் விஸ்வநாதன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, படுக் கைகளின் எண்ணிக்கை, நோயாளிகளின் விவரம், மருத்து வர்கள், பணியாளர்கள் எண்ணிக்கை, மருத்துவ உபகரணங் கள், கட்டட வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வில் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் சாந்தி, மருத்துவ அலுவ லர் கனிமொழி, மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர் கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தடுப்பணையை சீரமைக்க கோரிக்கை
தருமபுரி, ஜன.7- தருமபுரி மாவட்டம், அரூர் அருகே கொளகம்பட்டியில் கல் லாற்றின் குறுக்கே காரஒட்டு தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையின் வாய்க்கால் வழியாக செல்லும் தண்ணீரா னது அரூர் பெரிய ஏரி, தொட்டம்பட்டி ஏரி, குட்டைகளில் நிரம்பு கிறது. இங்குள்ள தடுப்பணையின் உயரம் குறைவாக இருப்ப தால் மழைக்காலங்களில் கல்லாற்றின் வழியாக அதிகளவில் மழைநீர் வெளியேறி வாணியாற்றில் கலக்கிறது. இதனால் பருவ மழைக்காலங்களில் விவசாயிகள், சமூக ஆர்வலர் கள் தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்க மணல் மூட்டைக ளை அடுக்கி ஏரிகளுக்கு தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர். எனவே, கொளகம்பட்டியில் உள்ள காரஒட்டு தடுப்பணை யின் உயரத்தை அதிகரித்து, சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்திக்கடவு - அவிநாசி திட்ட சோதனை ஓட்டம் குழாய் உடைந்து தெருவில் வெள்ளம் பாய்ந்தது
கோவை, ஜன.7- அத்திக்கடவு - அவிநாசி திட்ட சோதனை ஓட்டத்தின் போது குழாயில் உடைப்பு ஏற்பட்ட தால் தண்ணீர் ஆறாய் தெருவில் ஓடியது. அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் 95 சதவீத நிறைவு பெற்றுள்ளன.மேலும், குழாய் பதிக்கும் பணிகள் முழுவதும் நிறைவு பெற் றுள்ளதால், அத்திக்கடவு தண்ணீரை இத்திட் டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள குளம், குட் டைகளில் நிரப்பி சோதனை ஓட்டம் நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஞாயிறன்று அன்னூர் அடுத்துள்ள குமார பாளையம் குட்டைக்கு தண்ணீர் நிரப்பி சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது, தண்ணீர் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட் டது. இதனால், குழாயில் இருந்து பீய்ச்சிய டித்த தண்ணீர் தெருவெங்கும் வெள்ளமென பாய்ந்தது. மேலும், சுமார் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் அருவி போல கொட்டுவதால் அப்ப குதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தக வல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அத்திக் கடவு - அவிநாசி திட்ட அதிகாரிகள் விரைந்து வந்து குழாய் உடைப்பை சரி செய்யும் பணி யில் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் அத்திக்கடவு அவினாசி திட்ட சோதனை ஓட்டத்தில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக் கது.
மாணவி தற்கொலை: உறவினர்கள் போராட்டம்
உதகை,ஜன.7- கோத்தகிரியில் கல்லூரி மாணவி தற் கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தற்கொலைக்குத் தூண்டிய இளைஞரை கைது செய்ய வலியுறுத்தி, மாணவியின் உற வினா்கள் காவல் நிலையத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோத்தகிரி ராம்சந்த் கல்பனா காட்டேஜ் பகுதியைச் சேர்ந்தவர் கணேசமூா்த்தி. இவ ரது மனைவி மல்லிகா இவா்களது மகள் ஸ்ரீநிதி (21) கோவையில் உள்ள யுனைடெட் மருத்து வக் கல்லூரியில் பிஸியோதெரபி இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். சில நாள்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த ஸ்ரீநிதி, கடந்த 2-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தற்கொலை செய்து கொள்வ தற்கு முன் ஸ்ரீநிதி எழுதிவைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் ஒரு இளைஞரின் பெயரை குறிப்பிட்டு எழுதி அவர் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி யதாகத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறி கோத்தகிரி காவல் நிலை யத்தை ஸ்ரீநிதியின் உறவினர்கள் வெள்ளி யன்று முற்றுகையிட்டனர். அந்த முற்றுகை யில் சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட் டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களி டம் போலீசார் அந்த இளைஞர் தலைம றைவாக உள்ளதாகவும், விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்ட பின்பு போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
வெல்லத்தில் கலப்படம்: 13 ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கல்
நாமக்கல், ஜன.7- நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டி கையை முன்னிட்டு, உணவு பாதுகாப்பு துறை சர்க் கரை தயாரிப்பு ஆலைகளில் திடீர் ஆய்வு மேற் கொண்டனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், அண்ணா நகர் மற்றும் ஜேடர்பாளையத்தில் உள்ளயிட்ட இடங்களில் வெல்ல தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகி றது. இங்கு சர்க்கரை கலந்து வெல்லம் தயாரிக்கப் படுவதாக புகார் எழுந்தது. இதைதொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவ லர் அருண் தலைமையில் கபிலர்மலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி மற்றும் அலுவலர்கள் ஜேடர்பாளையம் பகுதியில் செயல் படும் வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிப்பு ஆலை களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 16 ஆலைகள் தணிக்கை செய்யப்பட்டன. வெல்லம் பாகு தயாரிக்கும் இடம், சர்க்கரை இருப்பு, வேதிப் பொருட்கள் இருப்பு போன்றவை தணிக்கை செய் யப்பட்டது. ஆய்வின் போது சர்க்கரை மற்றும் வேதிப்பொருட்கள் கொண்டு நாட்டு சர்க்கரை, வெல்லம் தயாரித்த 13 ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தரம் குறைவாக தயாரிக்கப் பட்ட வெல்லம், நாட்டு சர்க்கரை மற்றும் கலப்படம் செய்ய வைத்திருந்த 12 ஆயிரம் கிலோ சர்க்கரை, வேதிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 13 இடங்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோத னைக்கு அனுப்பப்பட்டது. இந்த ஆய்வு குறித்து மாவட்ட உணவு பாது காப்பு நியமன அலுவலர் கூறுகையில், பிளாஸ்டிக் போன்றவற்றை எரிபொருளாக ஆலைகளில் பயன்படுத்தக் கூடாது. மேலும் வெல்லம் தயா ரிக்க சர்க்கரை, வேதிப்பொருட்கள் பயன்படுத்தக் கூடாது. கலப்பட பொருட்கள் வைத்திருந்த ஆலை கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆய்வு வரும் நாட்களில் தொடர்ந்து நடைபெ றும் என தெரிவித்துள்ளனர்.
அணை நிலவரம்
சேலம், ஜன.7- மேட்டூர் அணைக்கு நீர் வரத்து ஞாயிறன்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 544 கன அடியிலிருந்து 555 கன அடியாக சற்று அதிகரித்தது. குடிநீர் தேவைக்காக விநா டிக்கு 600 கனஅடி வீதம் தண் ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.73 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட் டம் 71.21 அடியிலிருந்து 71.19 அடியாக குறைந்து காணப் பட்டது.