districts

img

உலக இதய தினம்: கண்காட்சி திறப்பு

கோவை, செப்.29- உலக இதய தினத்தை முன்னிட்டு, கோவை ராமகிருஷ்ணா கல்லூரியில் மனித இதயத்தை கொண்டு கண்காட்சி நடைபெறுகிறது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி துவக்கி வைத்தார். உலக இதய தினம் செப்.29ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. ஆரோக்கியமாக இதயத்தை பாதுகாப்பதற்காகவும், இதய நோய்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், சுமார் 1.7 கோடி பேர் இருதய நோயால் மரணமடைகின்றனர். இது உலகளாவிய இறப்புகளில் சுமார் 31 சதமாகும்.  அதன்படி, வெள்ளியன்று கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இதய அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த கண்காட்சியில் மருத்துவ மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கு இதயத்தின் செயல்பாடுகள், பல்வேறு இதய நோய்கள் ஏற்படும் போது அதற்கு சிகிச்சை அளிக்கும் முறை குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.  மேலும், மனித இதயம் மற்றும் 5 வயது குழந்தையின் இதயத்தை காட்சிப்படுத்தினர். இதில், இதயத்தின் அமைப்பு மற்றும் இதயத்தின் எந்த பகுதிகளில் பாதிப்பின் தன்மை குறித்து, அதற்கு மருத்துவ கருவிகளை பயன்படுத்தும் முறை குறித்து விளக்கம் அளித்தனர். இக்கண்காட்சி வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.