மேற்குத் தொடர்ச்சி மலையின் பாலக் காடு கணவாய் வழியாக வரும் காற்று இத மாக இருப்பதால் கோவை, திருப்பூர், திண் டுக்கல் மாவட்டங்களில் வருடம் முழுமையும் வெண்பட்டு உற்பத்தி செய்யத் தகுந்த தட்ப வெப்பநிலை இருப்பதால், உலகத்த ரத்தில் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டு அதிக அளவில் ஏற்றுமது செய்ப்படுவதால், இங்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள் பட்டு உற்பத்தி தொழில் செய்து வருகின்றனர். மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் காடுகளில் இருந்த பாமர மனிதனிடமிருந்து பட்டுக் கூடு வந்தாக கூறப்படுகிறது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் தோன் றியதாக ஆய்வுகள் கூறுகிறது. 2000 ஆண்டு கள் முன்பு தான் பட்டு உற்பத்தி உலகநாடுகள் முழுவதும் பரவியது. இந்தியாவில், கர்நாடக மாநிலத்தில் மைசூரில் உள்ள ராஜாவுக்கு பட்டினால் ஆன ஆடைகள் வந்தாக வரலாறு உள்ளது. அதன் பின் இந்தியாவில் பல மாநிலங்களில் பட்டு விவசாயம் பரவியது. முதலில் உலகம் முழுவதும் மஞ்சள் பட்டுக் கூடுகளினால் ஆன ஆடைகள் பயன் பாட்டிலிருந்தது. பின்னாளில் ஜப்பான் நாட் டின் ஜெயிக்கா திட்டத்தின் மூலம் புதிய தொழில் நுட்பத்துடன் வெண்பட்டு கூடுகள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்ப காலத் தில் குடியிருக்கும் வீடுகளில் உள்ள வட்டத் தட்டுக்களில் புழுக்களை வளர்த்து பட்டுக் கூடு உற்பத்தி செய்யப்பட்டது. நாளடை வில் பட்டுக் கூடு வளர்ப்பானது விவசாயிக ளிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. பட்டுக்கூடு கள் அதிக அளவில் உற்பத்தி செய்து நடை முறைப் படுத்தப்பட்டது.
அதன் பின் பட்டு வளர்ச்சித்துறை உருவாக்கப்பட்டது. சமீபகாலத்தில் உயரிய தொழினுட் பத்தால் வேலை பழு குறைந்துள்ளது. வெண் பட்டு புழுக்கள் சதுர வடிவ தட்டிகள் (ரேக் ஸ்டம்) மூலம் தனி மனை அமைத்து விரிவுப டுத்தப்பட்டது. பின்பு முட்டை பொறிப்பு, புழு வளர்ப்பு, ஆகியவை விவசாயிகளால் செய் யப்பட்டு வந்தது. தற்போது அந்த கால நிலை குறைக்கப்பட்டு, நவீன தொழினுட்ப முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு, இளம் புழு வளர்ப்பு மையங்கள் மூலம் புழுக்கள் பெறப்பட்டு பட்டுக் கூடு உற்பத்தி செய்யப் பட்டு வருகிறது. பட்டுக் கூடுகளிலிருந்து நூல் இலை தயாரிக்கப்பட்டு இந்த சமூகத்தில் ஆடை அலங்காரமாகவும், மருத்துவத்துறை சார்ந்த பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்படு கிறது. மேலும் 50 க்கும் மேற்பட்ட நாடுக ளுக்கு பட்டு ஏற்றுமதியின் மூலம் மிகப் பெரிய அளவில் வருமானம் நாட்டிற்கு கிடைக்கிறது. இப்படி, பட்டு உற்பத்தி தொழில் விவசாயத் தின் ஒரு பகுதியாக உள்ளதால், விவசாயிகள் உலகத்தரத்தில் பட்டு உற்பத்தியை கொண்டு செல்ல பல புதிய தொழில் நுட்பங்களை ஏற்ப டுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். (ந.நி)