கொல்லிமலை, மார்ச் 22- உலக தண்ணீர் தினத்தையொட்டி தண்ணீர் மற்றும் தீ தடுப்பு விழிப்புணர்வு பேரணி நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில் நடைபெற்றது. கொல்லிமலை ஒன்றியம் வாழவந்தி நாடு, செம்மேடு பகுதி அருகே, உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி புதனன்று நடை பெற்றது. கொல்லி மலை வனச்சரக அலுவலர் தலைமையில் நடைபெற்றது. பேரணியில் வாழவந்தி நாடு ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன், இமயம் வேளாண் கல்லூரி மாணவர்கள், வாழ வந்தி நாடு ஜிடிஆர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், வவ்வில் ஓரி அரசு உண்டு உறைவிட பள்ளி மாணவ, மாணவியர், பழங்குடியினர், மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று தீ தடுப்பு விழிப்புணர்வு பிரசுரங்களை பொது மக்களுக்கு விநியோகம் செய்து. விழிப்புணர்வு ஏற் படுத்தினர். இந்தப் பேரணியானது முக்கிய சாலைகள் வழி யாக சென்று செம்மேடு பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.