தருமபுரி, ஜூலை 9- தருமபுரியில் கிராம வனக்குழுக்களுக்கான பயில ரங்கில் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். கிராம வனக்குழுக்களின் செயல்பாடுகளை மின் ஆளுமையின் கீழ் கொண்டு வருவது தொடர்பான பயில ரங்கம் தருமபுரி மாவட்ட வன அலுவலகத்தில் செவ்வா யன்று நடைபெற்றது. தருமபுரி மண்டல வனப்பா துகாவலர் எச்.சி.பத்மா தலைமை வகித்தார். கிராம வனக்கு ழுக்களின் செயல்பாடுகளை மின் ஆளுமையின் கீழ் நவீனம யமாக்குதல் தொடர்பாக திருநெல்வேலி, களக்காடு முண்டந்துரை புலிகள் காப்பக துணை வனப்பாதுகாவலர் / சூழல் மேம்பாட்டு அலுவலர் ஏ.அன்பு மற்றும் ஜெனித் ஆகியோர் விளக்கவுரையாற்றினர். தருமபுரி வன மண்ட லத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தருமபுரி வனக்கோட்டம், ஒசூர் வனக்கோட்டம், சமூக காடுகள் மற்றும் வனவிரிவாக்கக் கோட்டங்கள் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய வனக் கோட்டங்களின் கீழ் தமிழ்நாடு காடு வளர்ப்புத் திட்டத்தின் படி 273 கிராம வனக்குழுக்கள் உருவாக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. இதனால் கிராம வனக்குழுக்களின் செயல்பாடுகள் நவீனமயமாக்கப்பட்டு வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவது உறுதி செய்யப்படும் என பயிலரங்கத்தில் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தருமபுரி மாவட்ட வன அலுவலர். கா.ராஜாங்கம், கிராம வனக்குழுக்களின் செயல் பாடுகளை நவீனமயமாக்குவது தொடர்பாக வனச்சரக அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இப்பயில ரங்கத்தில் தருமபுரி சமூக காடுகள் மற்றும் வனவிரிவாக்க கோட்ட அலுவலர் சக்திவேல், வனக்கோட்ட உதவி வனப்பா துகாவலர்கள் வின்சென்ட், சி.சரவணன், மற்றும் 25க்கும் மேற்பட்ட வனச்சரக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.