districts

img

மருத்துவத் துறைக்கு ரூ.397.71 லட்சம் மதிப்பிலான பணிகள் - அமைச்சர் மா.சு., பேட்டி

கோவை, மார்ச் 13- மேற்கு மண்டலத்தில் மருத்து வத் துறைக்கு என ரூ. 397.71 லட்சம்  மதிப்பிலான பணிகள் துவங்கப் பட்டிருப்பதாக மருத்துவ மற்றும்  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச் சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார். கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், ரூ. 163.3 கோடி மதிப்பீட்டில் கட்டி  முடிக்கப்பட்ட புதிய உயர் சிறப்பு மருத்துவக் கட்டிடம் மற்றும் ரூ. 2.45 கோடி மதிப்பீட்டில் நீராவி  சலவை வசதி கட்டிடம் கட்டுவ தற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சியில் இருந்து காணொளி காட்சி வாயி லாக அடிக்கல் நாட்டியும், கட்டி டத்தை திறந்தும் வைத்தார்.  கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மருத்துவ மற்றும் மக் கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா.சுபிரமணியன் கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை பார்வையிட் டார்.  இதனைத் தொடர்ந்து செய்தி யாளரிடம் பேசிய அமைச்சர், தமி ழகத்தில் புற்றுநோயை துல்லிய மாக கண்டறிவதற்கு 2 இடங்க ளில் மட்டுமே பெட் சிடி ஸ்கேன் இருந்தது. தற்போது கோவை, சேலம், திருநெல்வேலி, தஞ்சா வூர், காஞ்சிபுரம் போன்ற 5 மாவட் டங்களில் இந்த பெட் சிடி ஸ்கேன் கள் அமைக்கப்பட்டு பயன்பாட் டில் இருந்து வருகிறது.  மேலும் கோவை அரசு மருத்து வமனையில் 26 கட்டண படுக்கை யறைகள், 100 தீவிர சிகிச்சைக் கான படுக்கைகள், 300 படுக்கை  வசதிகள், 10 அறுவை சிகிச்சை  அரங்குகள் அமைக்கப்பட்டுள் ளது. தொழில்நுட்பத்துடன் கூடிய  கருவிகள் இந்த மருத்துவம னைக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக் கிறது. அதுமட்டுமின்றி, கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் மருத்துவத் துறைக்கு என 397.71 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனை யில் மழை நீர் தேக்கத்தை போக்கும் விதமாக 10 கோடி ரூபாய்  செலவில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது. மேற்கு  மண்டலமான 4 மாவட்டங்களுக் கும் மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையிலான மருத்துவத்துறை அறிவிப்புகள் பெரிய அளவில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தி யாவில் முதன்முறையாக புதிய தேர்வாளர்களுக்கு கவுன்சிலிங் வைத்து காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. உதகையில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்வில், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை முதல்வர் நிர்மலா உள்ளிட் டோர் உடனிருந்தனர்.