வங்கி ஊழியர் சம்மேளனத்தின் சார்பில், இந்தியன் வங்கியில் பணியாற்றும் தற்காலிக கடைநிலை ஊழியர்கள் பங்கேற்ற கூட்டம் கோவை-தாமஸ் கிளப்பில் சனியன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, வங்கி ஊழியர் சம்மேளன கோவை மண்டல செயலாளர் மகேஷ், தலைவர் கணேசன் பங்கேற்று உரையாற் றினர். இதில், தற்காலிக கடைநிலை ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.