districts

img

பணி நேரத்தை வரைமுறைபடுத்த வேண்டும்

தருமபுரி, செப்.6- பணி நேரத்தை வரைமுறைபடுத்த வேண்டும் என மக் களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) வலியு றுத்தியுள்ளது. மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் (சிஐடியு) சிறப்பு பேரவைக்கூட்டம் தருமபுரி சிஐடியு அலுவ லகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.அங்கம்மாள் தலைமை வகித்தார்.  மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநிலத் துணைத் தலைவர் பாலாம்மிகா ஆகியோர் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் விஜயலட்சுமி, மாவட்டப் பொரு ளாளர் சசிகலா ஆகியோர் அறிக்கைகளை முன்வைத் தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, தமிழ்நாடு  மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டச் செய லாளர் தீ.லெனின் மகேந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  இக்கூட்டத்தில், மக்களை தேடி மருத்துவ தன்னார் வலர்களை, தொழிலாளியாக அங்கிகரித்து, பணி பாது காப்பை உறுதிபடுத்த வேண்டும். ஊக்கத்தொகை என்பதை  மாற்றி ஊதியமாக வழங்க வேண்டும். பணி நேரத்தை வரை முறை செய்ய வேண்டும். பணியிடத்தில் கண்ணியமாக நடத்த வேண்டும். எம்டிஎம் தன்னார்வலர்களை, சுகாதாரத் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு கைபேசி, ரீசார்ஜ், சீருடை, அடையாள அட்டை, பயணப் படி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் தருமபுரி மாவட்டத் தலைவராக ஏ.கோகிலா, மாவட்டச் செயலாளராக வி.விஜய லட்சுமி, துணைத்தலைவர்களாக திலகவதி, பிரியா, கலை வாணி, அகிலா, இணைச்செயலாளர்களாக திவ்யா, வெண் மதி, சிவகாமி, கெளசல்யா, மாவட்டப் பொருளாளராக பி. சசிகலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.