கோவை, மே 1- சாதி, மத பிரிவினை சக்திகளை புறந்தள்ளி, உழைக்கும் வர்க்கம் நிச்ச யம் வெல்லும் என மே தின எழுச்சி கொண்டாட்டத்தில் தொழிலாளர்கள் சூளுரைத்தனர். உலகம் முழுவதும் தொழிலாளர் களின் திருவிழாவான மே 1 ஆம் தேதி யன்று உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதன்ஒரு பகுதி யாக கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் மே தின விழா கொண் டாடப்பட்டது. கட்சியின் அமைப்புக் குழு உறுப்பினர் என்.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ் வில், கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் செங்கொடியை ஏற்றி வைத்தார். இதில், சிபிஎம் மாநில குழு உறுப்பினர் சி.பத்மநாபன், சிஐ டியு மாவட்ட பொருளாளர் ஆர்.வேலு சாமி, சிபிஎம் கிழக்கு நகரச் செய லாளர் என்.செல்வராஜ், சிஐடியு ஹோட்டல் சங்க நிர்வாகி சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, இந்நிகழ்வில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., பேசுகையில், பல உயிர்களை தியாகம் செய்து உரிமை களை பெற்ற தினமாக மே தினம் திகழ்கிறது. 136 ஆவது மே தினத்தை கொண்டாடுகிற இதேவேளையில், சிங்காரவேலர் தலைமையில் சென்னை கடற்கரையில் இந்தியா வில் முதன்முதலில் மே தினத்தை கொண்டாடிய பெருமைமிகு நூற் றாண்டு இந்த மே நாள். இன்று நாடு மிகப்பெரிய நெருக்கடியை எதிர் கொண்டுள்ளது. தொழிலாளி வர்க்கம் மிகப்பெரும் சுரண்டலுக்கு ஆளாக்கப் பட்டு வருகின்றனர். இந்த நெருக்கடி களை கண்டு தொழிலாளி வர்க்கம் துவண்டு போக வேண்டியதில்லை.
மார்க்சியமே வெல்லும் என்பதை உறு தியோடு ஏற்க வேண்டும். ஏனெனில் மார்க்சியம் என்பது வேதம் அல்ல, அது சமூக விஞ்ஞானம். எத்தனையோ அடக்குமுறைகளை எதிர்கொண்டு வெற்றி தோல்விகளை பார்த்துள் ளது. மார்க்சியம் மூடநம்பிக்கை, சட்டம் சார்ந்தது இல்லை. இது சமூக விஞ் ஞானம், உழைப்பாளி மக்களின் நம்பிக்கையை சார்ந்தது. ஆகவே, நாம் வெல்வோம். சாதி, மத, ராணுவ அடக்கு முறைகள் அனைத்தையும் எதிர் கொண்டு மார்க்சியம் முன் மொழிந்த பாட்டாளி வர்க்கம் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே நிச்சயம் நாம் தான் வெற்றி பெறுவோம். உழைப் பாளி மக்கள் இடதுசாரி இயக்கத்தை பலப்படுதுவதில் கூடுதல் முனைப் போடு பணியாற்ற வேண்டும் என மே நாளில் சூளுரைப்போம், என்றார்.
ஈரோடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத் தில் மே தின கொடியேற்று விழா மாவட்டக்குழு உறுப்பினர் பி.சுந்தர ராஜன் தலைமையில் நடைபெற்றது. செங்கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரிமுத்து ஏற்றி வைத் தார். இதில், மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்ரமணியன் மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.சகாதே வன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச் சியில் தோழர் சிங்காரவேலர் படத் திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. சிபிஎம் ஈரோடு நகரக்குழு அலுவ லகம் முன்பு நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்பிர மணியன், நகரக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். சத்தி அரி யப்பம்பாளையம் பேரூராட்சி முன்பு மே தினம் கொண்டாடப்பட்டது. பவானி தாலுகாவில் நடைபெற்ற மே தின விழாவில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிச் சாமி, இடைக்கமிட்டி செயலாளர் மாணிக்கம், மாவட்டக்குழு உறுப்பி னர் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் சிறை தியாகிகள் நினைவ கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவ லக செயலாளர் பி.சந்திரன் தலை மையில் மே தினம் கொண்டாடப்பட் டது. மாவட்ட செயலாளர் மேவை. சண்முகராஜா செங்கொடியை ஏற்றி வைத்தார். இதில், மாவட்ட செயற் ்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மேற்கு மாநகர செயலாளர் எம்.கனக ராஜ், வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலம் மாநகர குழு சார்பில் சீல நாயக்கன்பட்டி, கருங்கல்பட்டி, சுபாஷ் நகர், அல்லிக்குட்டை, அம்மா பேட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் செங்கொடி ஏற்றி கொண் டாடப்பட்டது. இதில், சிபிஎம் மாநகர கிழக்கு செயலாளர் பொன்.ரமணி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.வைர மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். சேலம் பழைய பேருந்து நிலை யம், அருணாசல ஆசாரி தெருவில் சிபிஎம் கிளை செயலாளர் ஆனந்த ராஜ் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கியும், பொதுமக்களுக்கு நீர் மோர், பழச்சாறு வழங்கியும் மே தினம் கொண்டாடப்பட்டது. அரியாக்கவுண்டம்பட்டி கிளை கள் சார்பில் 18க்கும் மேற்பட்ட இடங்க ளில் உழைப்பாளர் தினம் கொண்டா டப்பட்டது. இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங் கடபதி, எம்.குணசேகரன், டி.உதய குமார், மாவட்டக்குழு உறுப்பினர் கள் பி.சந்திரன், பி.பாலகிருஷ்ணன், ஏ.கோவிந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மூலப்பிள்ளையார் கோவில், சிவதாரபுரம் உள்ளிட்ட பகு திகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஞானசௌந்தரி, மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலம் தாலுகாவிற்குட்பட்ட பகுதி களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், தாலுகா செயலாளர் கே.எஸ்.பழனி சாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.பன்னீர்செல்வம், டி.பரமேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நங்க வல்லிக்குட்பட்ட பகுதிகளில் நடை பெற்ற நிகழ்ச்சிகளில், மாவட்ட செய லாளர் மேவை.சண்முகராஜா, மாவட் டக்குழு உறுப்பினர்கள் கே.ராஜாத்தி, ஜி.கவிதா ஆகியோர் பங்கேற்றனர். ஜலகண்டாபுரம் பகுதியில் ஊரக உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகி பானு தலைமையி லும், சிஐடியு சாலைப்போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் சுரேஷ் தலை மையிலும் செங்கொடி ஏற்றப்பட்டது. மேட்டூர் - கொளத்தூர் ஒன்றியக்குழு நடைபெற்ற நிகழ்ச்சிகளில், தாலுகா செயலாளர் வசந்தி, மாவட்ட செயற் குழு உறுப்பினர் வி.இளங்கோ, மாவட் டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.தேவி, சிஐடியு மாவட்ட நிர்வாகி சி.கருப் பண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.
மேச்சேரி பேருந்து நிலையத்தில் சிபிஎம் பேரூராட்சி கவுன்சிலர் ஆர்.பழனி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமமூர்த்தி செங் கொடியை கொடியேற்றி வைத்தார். மல்லியகுந்தம் பகுதியில் ஒன்றியக் குழு உறுப்பினர் அம்மாசி தலைமை யில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமமூர்த்தி, பழங்கோட்டை கட்சி அலுவலகத்தில் செல்வராஜ் தலை மையில் கிளைச் செயலாளர் எஸ்.பெருமாள் ஆகியோர் செங்கொடியை ஏற்றிவைத்தனர். இதில், சிஐடியு நிர் வாகி ராமநாதன், உயர்மின் கோபுர எதிர்ப்பு ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி காமராஜ், வாலிபர் சங்க பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆத்தூர் தாலுகாவில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சிகளில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.இராமமூர்த்தி, தாலுகா செயலா ளர் ஏ.முருகேசன்,சாலை போக்கு வரத்து சங்க மாவட்ட செயலாளர் என்.முருகேசன், ஆட்டோ சங்க மாவட்ட துணை செயலாளர் கண்ணன், சுமைப் பணி தொழிலாளர் சங்க பொறுப்பா ளர் பெரியசாமி, சாலை போக்கு வரத்து சங்க பொறுப்பாளர் விசுவநா தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தருமபுரி
தருமபுரி ஒன்றியத்தில் நடை பெற்ற மே தின நிகழ்ச்சிக்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் என்.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து செங் கொடியை ஏற்றி வைத்தார். இதில், மாவட்டக்குழு உறுப்பினர் கே.பூபதி உட்பட திரளானோர் கலந்து கொண்ட னர். அரூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இ.கே.முரு கன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஏ.குமார் கொடியேற்றி வைத்தார். ஒன்றியம் முழுவதும் நடை பெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் சோ.அருச்சு ணன், எம்முத்து, ஒன்றிய செயலாளர் பி.குமார் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவுக்கு வட்ட செயலாளர் தனுசன் தலைமை வகித்தார். இதில், மாவட்டக்குழு உறுப் பினர்கள் சி.வஞ்சி, டி.சேகர், தீர்த்த கிரி, பி.கிருஷ்ணவேணி, எம்.கணே சன், மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். காரிமங்கலம் பேருந்து நிலையத்தில் குப்புசாமியில் நடை பெற்ற நிகழ்ச்சியில், மாவட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் டி.மாதையன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பாலக்கோடு பேருந்து நிலை யத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்ட செயலாளர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். இதில், மாவட்டக்குழு உறுப் பினர் டி.எஸ்.ராமச்சந்திரன் செங் கொடியை ஏற்றி வைத்தார். மொரப்பூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கே.தங்கராஜ் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.மல்லிகா உட்பட பலர் கலந்து கொண்டனர். இண்டூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டக்குழு உறுப்பி னர் கே.என்.மல்லையன், பகுதி செய லாளர் எம்.சிவப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர். நல்லம்பள்ளியில் ஒன்றிய செயலா ளர் எஸ்.எஸ்.சிச்சராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.குப்புசாமி, கே.எல்லப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். செங்கொடிபுரத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவிற்கு நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கிரைஸா மேரி, மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ஜெயா உட்பட பலர் கலந்து கொண்ட னர்.
திருப்பூர்
திருப்பூரில் தொழிலாளர் தினம் வழக்கமான உற்சாகத்துடன் பெரு மளவு தொழிலாளர் பங்கேற்புடன் கொண்டாடப்பட்டது. குடியிருப்பு பகு திகளிலும், தொழிற்சாலைகள் முன்பா கவும் காலை முதலே செங்கொடி ஏற்றி முழக்கங்கள் எழுப்பி கொண்டா டப்பட்டது. அரசுப் போக்குவரத்துப் பணிமனை, பிஎஸ்என்எல் அலுவல கம், ஆர்எம்எஸ் அலுவலகம், மின் வாரிய அலுவலகம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவன அலுவலகங்கள் முன்பும் அந்தந்த சங்கங்களைச் சேர்ந்தவர்கள் திரளாக கூடி செங் கொடி ஏற்றி பொதுத்துறை நிறுவ னங்களைப் பாதுகாப்போம் என்று முழக்கங்கள் எழுப்பினர். திருப்பூர் பின்னலாடை தொழில் சார்ந்து முதலிபாளையம் சிட்கோ தொழிற்பேட்டை, புதுத் திருப்பூர் உள் பட பல்வேறு இடங்களில் தொழிலா ளர்கள் கொடியேற்றி மே தினத்தை உற்சாகமாகக் கொண்டாடினர்.இது தவிர அனைத்து குடியிருப்புப் பகுதி களிலும் மார்க்சிஸ்ட் கட்சி கிளைகள் சார்பில் ஆங்காங்கே ஊர்வலமாகச் சென்று செங்கொடிகள் ஏற்றி வைக் கப்பட்டன. திருப்பூர் மாநகரப் பகுதி யில் மற்றும் நூற்றுக்கணக்கான இடங் களில் மே தின விழா நடைபெற்றது. சிஐடியு, ஏஐடியுசி ஆகியவற்றின் சார்பில் மே தின விழா எழுச்சியோடு நடத்தப்பட்ட நிலையில் ஐஎன்டியுசி, எல்பிஎப், எம்எல்எப் உள்ளிட்ட மற்ற தொழிற்சங்கங்களின் சார்பிலும் மே தினம் கொண்டாடப்பட்டது.