நாமக்கல், பிப்.8- வால்ராசம்பாளையம் பகுதியில் உள்ள ஏரோ டெக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் விசைத்தறி தொழிலா ளர்களுக்கு, முறையான கூலி உயர்வை வழங்காதால், தொழிலா ளர்கள் பணிகளை புறக்கணித்து சிஐடியு தொழிற்சங்க அலுவலகத் தில் அடைக்கலமடைந்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபா ளையம் அடுத்துள்ள வால்ராசம் பாளையம் பகுதியில், செயல்ப டும் ஏரோ டெக்ஸ், விசைத்தறி கூடத் தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும் பங்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு முறையான கூலி வழங்க வேண்டும் என திருச்செங் கோடு கோட்டாட்சியர் டிஎஸ்பி ஆகி யோர் முன்னிலையில் பேச்சு வார்த் தையில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், ஏரோ டெக்ஸ் நிறுவனம் தொழிலாளர் விரோத போக்குடன் விசைத்தறி உரிமையாளர்கள் ஒப்பந் தத்தை இதுவரையில் நடைமுறைப் படுத்த வில்லை. இந்நிலையில் இதுகுறித்து சிஐ டியு தொழிற்சங்கத்தினர் முன்பு வெப் படை பேருந்து நிறுத்த பகுதி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், பாதிக்கப்பட்ட சுமார் எட்டு குடும்பங்களை சேர்ந்த 25-க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் விசைத்தறி உரிமையாளர்கள் புதிய ஒப்பந்தம் எதையும் அமல்படுத்தாமல், பழைய நிலையிலேயே கூலியை வழங்கு கின்றனர். சட்ட சலுகைகள் வழங்கா மல் தொழிலாளர்களை மிரட்டி வேலை வாங்குகின்றனர். ஏதேனும் கேள்வி கேட்டால் ஆபாச வார்த்தை களால் திட்டுவது, மிரட்டுவது போன்ற செயல்களை தொடர்ந்து செய்து வருகின்றனர். இனிமேல் அந்த விசைத்தறி கூடத்தில் பணிபு ரிய எங்களுக்கு விருப்பமில்லை என கூறி, காவேரி ஆர்.எஸ்,பகுதியில் அமைந்துள்ள சிஐடியு தொழிற்சங்க அலுவலகத்தில் அடைக்கலமடைந் தனர். இதனை அடுத்து சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் சட்டரீதி யாக அவர்களுக்கு உதவும் பொருட்டு, அரசு அதிகாரிகளை தொழிலாளர்களுடன் நேரில் சந் தித்து மனு வழங்கி பிரச்சனைக்கு உரிய தீர்வுக்கு எட்டுவதற்கான பணி களை தொழிற்சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.