districts

img

தனியார் மருத்துவமனையை நாடும் தொழிலாளர்கள்

 அமைச்சர் ஆதங்கம் கோவை, ஆக.21- தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு மருந் தகத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்த விழிப்புணர்வு இல்லா ததால் தனியார் மருத்துவமனையை நாடி  பணத்தை செலவு செய்கிற நிலை தொழிலா ளர்களிடம் உள்ளது என கோவையில் தொழி லாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணே சன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.  கோவை - மேட்டுப்பாளையம் சாலை,  துடியலூர் விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு மருந்த கத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் திங்களன்று நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். மருந்தக வளா கத்தில் உள்ள சுற்றுப்புற சூழல், மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் அறை, மருத் துவர்களின் அறை, ஆய்வு கிடங்கு உள்ளிட்ட வற்றை ஆய்வு மேற்கொண்ட அவர் அங் குள்ள நோயாளிகளிடம் இங்கு கிடைக்க  பெரும் மருத்துவ வசதிகள் குறித்தும் தேவைப் படும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தியா ளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்காக இயங்கக்கூடிய அரசு ஈட்டுறுதி மருந்தகங்களை நேரடியாக சென்று ஆய்வு செய்து வருவதாக தெரி வித்தார். தொழிலாளர்களுக்கு மருத்துவ உத விகள் முறையாக வழங்கப்படுகிறதா என் பதை ஆய்வு செய்து வருகிறோம்.

தொழிலா ளர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்ப டுத்தி அனைத்து தொழிலாளர்களும் இங்கு  வந்து மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். தொழிலாளர்களுக்கு இது  குறித்து தெரியாமல் வெளியில் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை  பெற்று வருகிறார்கள். அதனை ஒழிக்கத் தான், இது போன்ற ஆய்வுகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. மேலும், ஒரு நாளைக்கு எத்தனை நபர்கள் சிகிச்சைக்காக வருகி றார்கள் என பல்வேறு விஷயங்களை ஆய்வு  செய்து மருத்துவர்களிடத்தில், வருகின்ற  நோயாளிகளிடம் இன்முகத்துடன், பேசி அவர் களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை காலதாமதம் இல்லாமல் உடனடியாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். மருத்துவமனையைச் சுற்றியுள்ள முட் புதர்களை அகற்ற வேண்டும் என தெரிவித் திருக்கிறோம். தமிழகம் முழுவதும் ஆய்வு  செய்து வருகிறேன் என தெரிவித்தார். மேலும் கணினி மயமாக்கும் நடவடிக்கையும் மேற் கொள்ளப்பட்டு வருகிறது என்றார். இந்த  ஆய்வின்போது கோவை மாவட்ட ஆட்சி யர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணை யர் மு.பிரதாப், அரசு ஈட்டுறுதி மருத்துவ மனை நிர்வாக மருத்துவ அலுவலர் காஞ்சனா  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.