districts

img

அமாரவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிலுவை சம்பளம் வழங்கக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

உடுமலை, மார்ச் 26- அமாரவதி கூட்டுறவு சர்க்கரை  ஆலை தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங் கப்படாததை கண்டித்து சனியன்று ஆலையின் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மடத்துக்குளம் தாலூகா கிருஷ் ணாபுரத்தில் தமிழக அரசின் கூட்டுறவு துறையின் கீழ் அமாரவதி சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் பரமரிப்பு உள்ளிட்ட பல் வேறு துறைகளில் நூற்றுக்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர் களுக்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து சனியன்று ஆலையின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதுகுறித்து தொழிலாளர்கள் கூறி யதாவது, கடந்த நான்கு மாதமாக சம்ப ளம் வழங்காத ஆலை நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்தும், தொழி லாளர்களிடம் பிடித்தம் செய்த வருங் கால வைப்பு நிதி தொகையை நிலுவை யில்லாமல் செலுத்த வேண்டும். கடந்த மாதம் வரையில் பணி ஓய்வுபெற்ற  தொழிலாளர்களுக்கு வழங்க வேண் டிய பணிக்கால பணப்பயன்களை தர வேண்டும். ஆலையில் வேலை செய்து  கொண்டிருக்கும் போது இறந்த தொழி லாளர்களின் குடும்ப உறுப்பினர் களுக்கு வேலை மற்றும் அவர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய சலுகை களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஆலை நிர்வாகம் உடனடியாக நடைமுறைப டுத்தாவிட்டால் வரும் 28 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி  வரை அனைத்து தொழிலாளர்களும் உண்ணாவிரத போராட்டம் நடத்த வும், பின்னர் 29 ஆம் தேதி முதல் தொழி லாளர்களின் கோரிக்கை நிறை வேறும் வரை காலவரையற்ற வேலை  நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.