திருப்பூர், பிப்.10– திருப்பூர் மாவட்ட தொழில் பாது காப்பு, தொழிலாளர் வாழ்வுரிமை மாநாட்டு விளக்க வாகனப் பிரச்சார இயக்கம் திருப்பூரில் நடத்தப்பட் டது. திருப்பூர் மாவட்டத்தில் பின்ன லாடை, விசைத்தறி, கைத்தறி உள் ளிட்ட ஜவுளித் தொழில்களும், கறிக் கோழி வளர்ப்பு, எண்ணெய் உற்பத்தி உள்ளிட்ட பிற தொழில்களும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதை நம்பி வேலை செய்யும் லட்சக்கணக் கான தொழிலாளர்களும் வேலை மற் றும் வருமான இழப்பு என கடும் வாழ் வாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். எனவே ஒன்றிய அரசும், மாநில அரசும் திருப்பூர் மாவட்டத் தொழில், தொழிலாளர் நலனைப் பாதுகாப்ப தற்கான கொள்கைகளை மேற் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வரும் 14ஆம் தேதி திருப்பூர் அரி சிக்கடை வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநாடு நடத்துகிறது. இம்மாநாட்டை பற்றிய மக்களி டம் கொண்டு செல்லும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகரக் குழு சார்பில் வியா ழன், வெள்ளி இரு நாட்கள் வாகனப் பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது. வியாழனன்று திருப்பூர் காலேஜ் ரோடு, சரளைக்காடு, வ.உ.சி.நகர், காந்திநகர், குமரானந்தபுரம் மற்றும் ராமமூர்த்தி நகர் ஆகிய ஆறு மையங் களில் இந்த பிரச்சாரம் நடைபெற் றது. அதேபோல் வெள்ளியன்று திரு மலை நகர், ஏ.கே.ஜி.நகர், கொடி மரம், கருமாரம்பாளையம், பிரிட்ஜ்வே காலனி ஆகிய ஐந்து மையங்களில் பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது. இந்த இரண்டு நாட்கள் நடை பெற்ற பிராச்சார இயக்கத்தில், கட்சி யின் வடக்கு மாநகரச் செயலாளர் பி. ஆர்.கணேசன், மாநகரக்குழு உறுப் பினர்கள் எஸ்.ராஜேந்திரன், ப.சௌந்தரராஜன், ஆர்.மைதிலி, வை.ஆனந்தன், கே.நாகராஜ், ஆர்.நந்தகோபால், என்.மனோகரன், துரை சம்பத், பா.ராஜேஷ், பி.பாலகு மாரன் ஆகியோர் இம்மாநாட்டு நோக் கத்தை விளக்கி உரையாற்றினர். இந்த இரு நாட்கள் நடைபெற்ற இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் இருசக்கர வாகனங்களில் திரளாக பங்கேற்றனர்.