திருப்பூர், அக்.10- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழ கத்தில் பணிகளை அவுட்சோர்சிங் என் கிற பெயரில் தனியார் வசம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். அவுட்சோர்சிங் விடுவதை கண்டித் தும், காலி பணியிடங்களை நிரப்பவும், ஊதிய பேச்சு வார்த்தையை தொடங்க வும், படித்து வேலை இன்றி காத்திருக் கும் இளைஞர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்கவும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வலியு றுத்தி சிஐடியு அரசு போக்குவரத்து ஊழி யர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பூர் அரசு பேருந்து பணி மனை மண்டல அலுவலகம் முன்பாக செவ்வாயன்று நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் மண்டலத் தலைவர் கந்தசாமி தலைமை ஏற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை பொதுச்செய லாளர்கள் கெங்குராஜ், வி.விஸ்வநா தன் ஆகியோர் உரையாற்றினர். மண் டல பொதுச் செயலாளர் செல்லத்துரை சிறப்புரை ஆற்றினார். மண்டல பொரு ளாளர் என்.சுப்ரமணியம் நிறைவுரை யாற்றினார்.