districts

img

மகளிர் உரிமைத்தொகை: மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, நவ.20- மாற்றுத்திறனாளி பெண்களுக் கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். அனைத்து மாற்றுத்திறனாளி குடும்ப பெண்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்ப அட்டை இல்லாத மாற்றுத் திறனாளி பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண் டும். தமிழ்நாடு அரசின் சிறப்பு ஆணைப்படி முகாம் நடத்தி, மகளிர் உரிமைத்தொகை கிடைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.  தருமபுரி கோட்டாட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, மாற்றுத்திறனாளி கள் சங்க மாவட்டத் தலைவர் கே.ஜி. கரூரான் தலைமை வகித்தார். இதில், சங்கத்தின் மாவட்டச் செய லாளர் எம்.மாரிமுத்து, மாவட்ட நிர் வாகிகள் கே.சுசிலா, திருஞானம், கார்ல் மார்க்ஸ், அண்ணாமலை, சக்திவேல், மாதம், தமிழ்செல்வன்  உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கோரிக்கைகள் அடங்கிய  மனுவை சங்க தலைவர்கள், தரும புரி கோட்டாட்சியர் கீதா ராணி யிடம் அளித்தனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாற்றுத்திறனா ளிகள் சங்க தாலுகா தலைவர் துரை சாமி தலைமை வகித்தார். இதில்  சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.முருகேசன், குமாரபாளை யம் தாலுகா தலைவர் அர்ஜுனன், செயலாளர் அருண்குமார், பொரு ளாளர் கனகவள்ளி, உதவித்தலை வர்கள், உதவிச்செயலாளர்கள் உட் பட ஏராளமான மாற்றுத்திறனாளி கள் கலந்து கொண்டனர். ஈரோடு இதேபோன்று ஈரோடு வரு வாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட உதவித்தலைவர் ப.மாரி முத்து தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் நகரச் செயலாளர் செந் தில், மாவட்டக்குழு உறுப்பினர் ரேணுகா உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடி வில் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. கோபிசெட்டி பாளையம் வருவாய் கோட்டாட்சி யர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சாவித்திரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் மாவட்டச் செயலா ளர் ஏ.சகாதேவன், மாவட்ட உதவிச் செயலாளர்கள் அன்னக்கொடி, ரமேஷ், நாசீர் பேக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.