districts

img

கோவையில் பெண்களுக்கான இரவு நேர மாரத்தான்

கோவை, ஜன.18- கோவையில் இரண்டாவது முறையாக ஜெம் அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான இரவு நேர மாரத்தான் போட்டி நடத்தப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெம் அறக்கட்டளை சார்பில் பெண்களின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டும் பெண்க ளுக்கு வயிற்று பகுதி, கர்ப்பப்பை  பகுதியில் வருகின்ற புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவ தற்காக இரவு நேர மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது.  கடந்த ஆண்டு இந்த போட்டி துவங்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது முறையாக இந்த ஆண்டு வருகின்ற பிப்ரவரி 17ஆம்  தேதி இரவு நேர மாரத்தான் போட்டி  நடத்தப்பட உள்ளது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து பெண்கள் பங் கேற்பர். இந்நிலையில் இப்போட்டிக் கான ”டீ சர்ட்” வியாழனன்று வெளி யிடப்பட்டது. இதனை கோவை மாந கர காவல் ஆணையாளர் பாலகி ருஷ்ணன் ஜெம் மருத்துவமனை அரங்கில் வெளியிட்டார்.   இந்நிகழ்வில் பங்கேற்று காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், பெண்கள் அவர்களது வீட்டில் உள்ளவர்களை பார்த்து கொள்வது போல், அவர்களை பார்த்து கொள்வதில்லை. இப்படிப் பட்ட சூழலில் நோய்தடுப்பிற்க்காக, இப்படியான போட்டிகள் நடத்து வது, அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மன நிம்மதியை அளிக்கும் என்றார்.  ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர். பழனிவேலு பேசுகையில், இம்மாரத்தான் போட்டியில், சுமார்  5000க்கும் மேற்பட்ட பெண்கள் பங் கேற்பார்கள் என எதிர்பார்க்கப்ப டுகிறது. 3, 5, 10 கிமீ தூரம் மாரத்தான்  போட்டி நடத்தப்பட உள்ளது என் றார். இதில் பங்கேற்க விருப்ப முள்ள பெண்கள் www.coimbatore womensmarathon.com என்ற தளத்தில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.