சேலம், மார்ச் 15- மேட்டூரில் சிஐடியு, மாதர் சங்கம் சார்பில் மகளிர் தின சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சிஐடியு, மாதர் சங் கம் சார்பில் மேட்டூர் தோழர் கே.பி.ஜானகியம்மாள் நினைவு திடலில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ் விற்கு மாதர் சங்க மேட்டூர் செயலாளர் எஸ்.எம்.தேவி தலைமை வகித்தார். கட்டுமானம், உள்ளாட்சி மற்றும் மாதர் சங்க பெண் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வைரமணி, மாதர் சங்க மாவட்ட செய லாளர் ஐ.ஞானசவுந்தரி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில், மேட்டூர் நகரமன்ற தலைவர் சந்திரா, தாய் தமிழ் பள்ளியின் தலைமை ஆசிரியர் தனலட்சுமி மற்றும் மேட் டூர் நகராட்சியில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான இடங்க ளில் வெற்றி பெற்றுள்ள பெண் கவுன்சிலர்கள் கௌரவிக் கப்பட்டனர். முன்னதாக, பள்ளி மாணவிகள் பங்கேற்ற சிலம்பம் போட்டி நடைபெற்றது. அதில் பங்கேற்ற சிறுமி களுக்கு சிஐடியு தலைவர்கள் நினைவு பரிசு வழங்கினர்.