அன்னூர், மார்ச் 9- அன்னூரில் மகளிர் தினத்தையொட்டி, ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கத்தினர் கேக் வெட்டி கொண்டாட் டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட பார்க் வீதி, ஏ எம் காலனி, கூத்தாண்டவர் கோவில் வீதி, பொன்னே கவுண்டன் புதூர் ஊராட்சி உள்ளிட்ட இடங்களில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் மகளிர் தினத்தையொட்டி கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அன்னூர் பேரூராட்சி கவுன்சிலர் முகமது முசிர், மாதர் சங்க நிர்வாகி சத்தியா, வாலிபர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் பாரதி, மைதிலி, அர்ஜுன், பிரதீப் மற்றும் சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.