ஜிபிஎஸ் மூலம் இருசக்கர வாகனத்தை மீட்ட பெண்
ஈரோடு, டிச.9- கோபியில் இருந்து 27 கி.மீ. தூரம் சென்று திருட்டுப் போன இருசக்கர வாகனத்தை ஜிபிஎஸ் தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி பெண் ஒருவர் மீட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக கணேஷ்குமார் (44) உள்ளார். இந்நிலையில், கோபி குப்பை மேடு பகுதியில் உள்ள பணிமனைக்கு அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பணிமனைக் குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் காணவில்லை. இதுகுறித்து, கோபி போலீசில் புகார் செய்தார். மேலும், கணேஷ் குமாரின் இருசக்கர வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப் பட்டிருந்தது. அதன் இயக்கத்தை கண்டுபிடிக்கும் செல்போ னானது அவருடைய மனைவி லட்சுமியிடம் இருந்தது. தகவலறிந்தும் லட்சுமி தன்னிடம் இருந்த செல்போன் மூலம் இருசக்கர வாகனத்தின் இயக்கத்தை பார்த்தார். அப்போது அந்த இருசக்கர வாகனம் பவானி நோக்கி சென்று கொண்டி ருந்தது ஜிபிஎஸ் கருவி சிக்னல் மூலம் தெரியவந்தது. இதையடுத்து, லட்சுமி தனது உறவினர்களுடன் ஜிபிஎஸ் கருவி சிக்னல் மூலம் திருட்டுப்போன இருசக்கர வாக னத்தை பின்தொடர்ந்து சென்றார். இதனிடையே கோபி போலீ சாரும் ஜிபிஎஸ் கருவியில் இருந்து கிடைத்த சிக்னல் மூலம் இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்தனர். பவானி பழைய பேருந்து நிலையம் அருகே போலீசார் மற்றும் லட்சுமியின் உறவினர்கள் திருட்டுப்போன இருசக்கர வாகனம் மற்றும் அதை திருடி சென்றவரை மடக்கி பிடித்தனர். பின்னர் பிடி பட்டவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீ சார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர் திரு வண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியைச் சேர்ந்த பி.ஏ. பட்டதாரியான குணாளன் (44) என்பதும், குடி போதையில் இருசக்கர வாகனத்தை திருடி சென்றதும், தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குணாளனை போலீசார் கைது செய்து கோபி நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
மருந்துக்கடை சூறையாடல்
கோவை, டிச.9- கோவையில் கடையின் உரிமையாளருக்கும், வாட கைக்கு இருந்து மருத்தகம் நடத்தி வருபவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச் சனை காரணமாக நீதி மன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், மருந்த கத்திலிருந்த பொருட்களை அதிகாலையில் சூறை யாடும் கண்காணிப்பு கேம ராக காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், செல்வபுரம் எல்ஐசி காலனி பகுதியைச் சேர்ந்த மெடிக் கல் நாராயணன் பேரூர் சாலை அருகே மணி மருந் தகம் நடத்தி வருகிறார். வாடகை கட்டிடத்தில் மருந் தகம் செயல்பட்டு வந்த நிலையில், கடை உரிமை யாளர் மாரியப்பனுடனான பிரச்சனை காரணமாக வாடகை பணத்தை நாரா யணன் நீதிமன்றம் மூலம் செலுத்தி வந்துள்ளார். இதனிடையே மாரி யப்பன் உடல் நலக்குறை வால் உயிரிழந்தார். இந் நிலையில், வெள்ளியன்று அதிகாலையில் மருந்த கத்திற்கு வந்த 20க்கும் மேற்பட்டோர் மருந்தகத்தின் கதவை உடைத்து உள்ளே சென்று, அங்கிருந்த பொருட்களை சூறையாடி சென்றுள்ளனர். இது அப் பகுதியிலிருந்த கண் காணிப்பு கேமரா காட்சி களில் பதிவாகி உள்ளது. இச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
அவிநாசி,டிச.9- கொண்டத்து காளியம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது. திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவிலில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், வெடித்து சிதறும் வாய்ப்பு உள்ளதால் தனக்கு பயமாக உள்ளது என தமிழக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கும், கேரள மாநில காவல் துறைக்கும் தனது அடையாளத்தை மறைத்து ஒரு நபர் தகவல் தெரிவித்தார். உடனடியாக கோவிலில் பக்தர்கள் வெளி யேற்றப்பட்டு சோதனை செய்ததில் வெடிகுண்டு தகவல் வெறும் மிரட்டல் என தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தி மத நல்லிணக் கத்தை சீர்குலைக்க பொய்யான தகவலை சொன்ன பெருமா நல்லூர், அப்பியாபாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திகே யன் (47) என்பவரை பெருமாநல்லூர் போலீசார் கைது செய்த னர்.
பள்ளி வளாகத்தில் தேங்கும் மழை நீர்: தீர்வு கோரி மாணவர்கள் மறியல்
திருப்பூர், டிச. 9- திருப்பூர் பல்லகவுண்டம்பாளையம் அருகே பள்ளி வளாகத்தில் தேங்கும் மழை நீருக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வலியு றுத்தி, மாணவ, மாணவியர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஊத்துக்குளி, பல்ல கவுண்டம்பாளை யம், சரவணா நகரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழை காரணமாக பள்ளி வளாகத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், மாணவர் கள் வகுப்புகளுக்கு செல்ல சிரமப்பட்டனர். மழை நீர் மூலமாக கொசு அதிகமாக உற்பத்தி யாகி வருகிறது. இதுதொடர்பாக பெற்றோர், பள்ளி தலைமையாசிரியர், வருவாய்த் துறை யினரிடம் தெரிவித்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காண வலியு றுத்தி, 200 மாணவ, மாணவியர் மற்றும் பெற் றோர் உள்ளிட்டோர் பல்லகவுண்டம் பாளை யம் பஸ் நிறுத்தத்தில் வியாழனன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத் திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் பெற்றோர் மாணவர் போராட் டத்தை கைவிட மறுத்து விட்டனர். பின், ஊத் துக்குளி வட்டாட்சியர் தங்கவேல் பேச்சு வார்த்தை நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து ஒரு மணி நேரமாக நீடித்த மறியல் கைவிடப்பட்டது. இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக அப்பள்ளியில் தேங்கியுள்ள தண்ணீரை அப் புறப்படுத்தவும், அங்கு மண்ணை கொட்டி சீர்செய்யும் பணி நடைபெற்றது.
சிபிஎம் போராட்ட அறிவிப்பு எதிரொலி: பொதுக்குழாயில் நிறுத்தப்பட்ட குடிநீர் மீண்டும் விநியோகம்
திருப்பூர், டிச. 9- திருப்பூர் மாநகராட்சிக்கு உட் பட்ட 9 மற்றும் 15ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுக் குழாய்களில் நிறுத்தப்பட்ட குடிநீர் விநியோகத்தை வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்ட அறிவிப்பு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து நேரில் பேச்சு வார்த்தை நடத்தி உறுதிமொழி அளித்த அதிகாரிகள், பொதுக் குழாய்களில் குடிநீர் விநியோ கம் செய்தனர். மேற்கண்ட இரண்டு வார்டுகளைச் சேர்ந்த அங்கேரி பாளையம், கிழக்கு வீதி துண்டுக் காடு, ஏ.எஸ்.எம் காலனி வெங்க மேடு, அவிநாசி கவுண்டம்பாளை யம், ஸ்ரீநகர், ஏ.வி.பி. லேஅவுட் பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். கடந்த காலத் தில் செட்டிபாளையம் ஊராட்சி நிர் வாகம் செயல்பட்டபோது, 50க்கும் மேற்பட்ட இடங்களில் பொது குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு, மேல் நிலை தொட்டிகள் மூலம் இரண்டா வது திட்ட குடிநீர் விநியோகம் செய் யப்பட்டு வந்தது. கடந்த மூன்று மாத காலமாக மேற் படி பகுதிகளில் உள்ள பொது குடிநீர் குழாய்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை, எனவே போர்க் கால அடிப்படையில் உடனடியாக நட வடிக்கை எடுத்து அனைத்து மக்க ளுக்கும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். மூன்றாவது திட்டத்தில் வீட்டு இணைப்புகளுக்கு பத்து நாட்க ளுக்கு ஒரு முறை தண்ணீர் வரும் நிலைமை உள்ளது. இதை நான்கு நாட்களுக்கு ஒரு முறை வீட்டு இணைப்புகளுக்கு தண்ணீர் கிடைக் கும் படி நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தியும் மாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகத்தில் கடந்த ஆறாம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் திட்டமிடப்பட்டது. இந்தத் தகவல் அறிந்து அன் றைய தினம் காலை மாநகராட்சி குடி நீர் உதவி பொறியாளர் செந்தில் கணேசன், குழாய் ஆய்வாளர் சுகுமார் ஆகியோர் நேரில் வந்து மார்க்சிஸ்ட்கட்சி நிர்வாகிகளிடமும், அப்பகுதி பொது மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடி யாக தீர்வு காணப்படும் என அதிகா ரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நடவ டிக்கை மேற்கொண்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் வெள்ளி யன்று குடிநீர் விநியோகம் செய்த னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் விநியோகம் செய்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் சார்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நன்றி தெரிவித்தனர்.
அதிக வட்டி கேட்டு மிரட்டுவதாக காவல் நிலையத்தில் புகார்
கோவை, டிச.9- அதிக வட்டி கேட்டு மிரட்டுவதாக பார்சல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கோவை பீளமேடு காந்திமாநகரை சேர்ந்தவர் கோகுல் (32). உணவு பார்சல் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகி றார். இவர் கடந்த 2020ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சொர்ணவள்ளி என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கிய தாக கூறப்படுகிறது. அப்போது பூர்த்தி செய்யப்படாத காசோலையை சொர்ண வள்ளி பெற்றுக் கொண்டார். பின்னர் கோகுல் ரூ.70 ஆயிரம் வரை வட்டியுடன் சேர்த்து பணத்தை கட்டியுள்ளார். ஆனால், சொர்ணவள்ளி ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறி கோகுலிடம் இருந்து பெற்ற காசோ லையை வங்கியில் செலுத்தியுள்ளார். பணம் இல்லாததால் காசோலை திரும்பியது. இதனை யடுத்து சொர்ணவள்ளி தன்னிடம் கடன் பெற்று கோகுல் ஏமாற்றிவிட்டதாக போலீசில் புகார் அளித்தார். இதனிடையே, அதிகவட்டி கேட்டு தன்னை மிரட்டுவதாக கோகுல் பீள மேடு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை கொள்ளை
சேலம், டிச.9- சேலம் மாவட்டம், பவ ளத்தானுர் பகுதியைச் சேர்ந்த விஜயன் (37) என்ப வர், சொந்தமாக டெம்போ வைத்துக்கொண்டு மளிகை பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இந்நி லையில் விஜயன், தனது தாயார் பானுமதி மற்றும் தம்பி பிரகாஷ் ஆகியோரு டன் டிச.2 ஆம் தேதியன்று வியாபாரம் செய்ய வெளி யூர்களுக்கு சென்றுவிட்டார். இதன்பின் வீட்டிற்கு வந்த அவர், வீட்டின் பூட்டு உடைக் கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப் பட்டு அதிலிருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 12 பவுன் தங்க நகைகள் திருடப் பட்டது தெரியவந்தது. இது குறித்து தாரமங்கலம் போலீ சார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
தனியார் மருத்துவமனை ஊழியர்களின் செல்போன்கள் திருட்டு
கோவை, டிச. 9- தனியார் மருத்துவமனை ஊழியர்கள் 5 பேரின் செல் போன்கள் ஒரே நேரத்தில் திருட்டு போன சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் ராமநாத புரம் பகுதியில் உள்ள ஜெம் தனியார் மருத்துவமனையில் தங்கி சமையல் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். சம்ப வத்தன்று இரவு இவர் வேலையை முடித்துவிட்டு தனது அறைக்கு சென்றார். அப்போது, அறையில் சரவணனுடன் பணியாற்றும் கலைச்செல்வன், தினேஷ், லிங்கேஸ்வர், ஜெயக்குமார் ஆகி யோரும் இருந்தனர். தூங்கும் முன்பு அனைவரும் தங்களது செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு சென்றனர். காலை விடிந்த தும் பார்த்தபோது அவர்கள் 5 பேரின் செல்போனும் மாயமாகி இருந்தது. இதுகுறித்து சரவணன் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனை ஊழியர்களின் செல்போன்களை திருடிச்சென்ற அடையாளம் தெரியாத நபரை தேடி வரு கின்றனர்.
மாற்றுத்திறனாளி மாணவி சாதனை
நாமக்கல், டிச.9- ராசிபுரம், வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவி இடது கை செயல்பட முடியாத நிலையிலும், தட்டச்சுத் தேர்வில் சாதித்து அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்துள்ள வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்தவா்கள் கோபி-சரண்யா தம்பதி. விசைத்தறி நெசவுத்தொழிலாளியான இவர்களுக்கு பாவனாஸ்ரீ என்ற மகளும், தினேஷ் என்ற மகனும் உள்ளனர். இதில் பாவனாஸ்ரீ வெண்ணந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவருக்கு பிறவியிலேயே இடது கை செயல்படாது, இருப்பினும் மனம் தளராமல், படிப்பிலும், குடும்பத்திலும் வழக்கமான பணிகளை தன்னம்பிக்கையுடன் மேற்கொள்வார். தற்போது 10ஆம் வகுப்பு பயின்று வரும் இவருக்கு ஐஏஎஸ் பயில வேண்டும் என்ற எண்ணத்தை இலக்காகக் கொண்டுள்ள பாவனாஸ்ரீ, ஆங்கில தட்டச்சில் சாதனை புரிந்துள்ளார். ஏற்கனவே தனது வலது கையில் உள்ள ஐந்து விரல்களைப் பயன்படுத்தி ஆங்கிலம் - கீழ்நிலை தட்டச்சுத் தேர்வில், தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது குறிப்பிட்ட நேரத்தில் தனது வலது கை ஐந்து விரல்களை மட்டுமே பயன்படுத்தி அதிவேகத்தில் தட்டச்சு செய்து, ஆங்கிலம் - உயா்நிலை தேர்வினை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்துள்ளார். வழக்கமாக இரு கைகளால் தட்டச்சு செய்பவர்களுக்கு மத்தியில், அதே வேகத்துடன், ஒரே கையில் குறிப்பிட்ட நேரத்தில் தட்டச்சு செய்து ஆங்கிலம் - உயர்நிலை தேர்வு எழுதி முடித்துள்ளார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சர்க்கரைவள்ளி கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
சேலம், டிச.9- சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் சர்க்கரைவள்ளி கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் சர்க்கரைவள்ளி கிழங்கு அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. நடப்பாண்டில் அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளதால், பெரும்பாலான இடங்களில் சர்க்கரைவள்ளி கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கர்நாடகா மாநிலத்திலிருந்து சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 5 டன் வரை சர்க்கரைவள்ளி கிழங்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. விற்பனைக்கு வரும் சர்க்கரைவள்ளி கிழங்குகளை சில்லரை வியாபாரிகள் வாங்கிச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை 3 மாதங்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து சர்க்கரை வள்ளிக்கிழங்கு அதிகளவில் விற்பனைக்கு வரும். தற்போது அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து உள்ளதால், விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் சர்க்கரைவள்ளி கிழங்கு வரத்து அதிகரித்து சீசன் களைகட்டியுள்ளது. ஒரு கிலோ சர்க்கரைவள்ளி கிழங்கு ரூ.25, ரூ.22, ரூ.20 என அளவைப் பொறுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது, என்றனர்.