சேலம், ஜன 08- வரதட்சணை கேட்டு கொலை மிரட் டல் விடுக்கும் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்ட பெண் 8 மாத கைக்குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் உடையாபட்டி பெருமாள் கோவில் மேடு பகுதியைச் சேர்ந்தவர் சுமதி(எ)பாத்திமா. இவர் தனது தாய், தந்தை ஆகியோருடன் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப் போது இளம் பெண் திடீரென ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா வில் ஈடுபட்டார். இதை பார்த்து பாது காப்பு பணியில் இருந்த காவலர்கள், அவரை சமாதானப்படுத்தி விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, ஆட்சி யரகத்தில் அதிகாரியை சந்தித்து புகார் அளிக்க அனுமதி வழங்கினர். புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சுமதி, எனக்கு திருமணம் ஆகி 18 மாதம் ஆகிறது. எனக்கு 8 மாத கைக் குழந்தை உள்ளது. எனது, திருமணத் தின்போது எங்கள் வீட்டில் 15 பவுன் நகை மற்றும் சீர்வரிசை கொடுத்தார்கள். இந்நிலையில், கடந்த மாதம் மேலும் 10 பவுன் நகையும், ஒரு லட்ச ரூபாய் பணமும் வாங்கி வா என, எனது கண வர் ஜான் பீட்டர் மற்றும் அவரது குடும்பத் தினர் கொடுமைப்படுத்துகின்றனர். மேலும் அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டுவிட்டு வெளியேற்றிவிட்டனர். மீறி வீட்டிற்குள் வந்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகின்றனர். ஏற்க னவே, நகை சீர்வரிசை கொடுத்திருந்த நிலையில் மீண்டும் நகை, பணம் கேட்டு கொலை மிரட்டு விடுகின்றனர். தற் போது எனது தாய் வீட்டில் வசித்து வரு கிறேன். இது குறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட ஆட்சியர் இது குறித்து நடவடிக்கை எடுத்து வரதட்சணை கொடுமை செய் யும் எனது கணவர் மற்றும் அவரது குடும் பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றார்.